Sunday 26 April 2015

நீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா?


கனவுகளும் அதன் பலன்களும்
நாம் காணும் ஒவ்வொரு
கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என்
பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.
ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன்
என்று தெரியவில்லை. சமீபத்தில் நான்
படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும்,
அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு
கிடைத்தது. அதில் நான் படித்ததை
உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை
பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட
கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 –
10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம்
மாதத்திலும், இரவு 10.48 – 1.12
மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்,
இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு
10 தினங்களிலும், விடியக்காலை 3.36
-6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும்
பலிதாகும் என்று ‘பஞ்சாங்க
சாஸ்திரம்’சொல்கிறதாம். பகலில்
காணும் கனவுக்கு பயனில்லையாம்.
நற்பலன் தரும் கனவுகள்
v ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை
கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம்
உண்டு.
v வானவில்லை கனவில் கண்டால் பணம்,
செல்வாக்கு அதிகரிக்கும். பதவி
உயர்வு கிடைக்கும்.
v கனவில் நிலவை கண்டால்
தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
v விவசாயிகள் உழுவதைப்போல் கனவு
கண்டால், சேமிப்பு மேலும்
பெருகும்.
v திருமணமாகாதோர் பாம்பு கடித்து
ரத்தம் வருவது போல் கனவு கண்டால்,
சீக்கிரம் திருமணம் நிகழும்.
திருமணமானோருக்கு செல்வம் வந்து
சேரும்.
v ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல்
கனவு கண்டால் நாம் நினைத்தது
எல்லாம் நிறைவேறும்.
v இறந்தவர்களின் சடலத்தைக் கனவில்
கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
v சிறு குழந்தைகளை கனவில் கண்டால்
நோயிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
v நண்பன் இறந்ததாக கனவு கண்டால்
நண்பனின் ஆயுள் கூடும்.
v தெய்வங்களை கனவில் கண்டால்
புதையல் கிடைக்கும்.
v இறந்தவருடன் பேசுவதைப் போன்று
கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம்
நிச்சயம் கூடி வரும்.
v திருமண கோலத்தை கனவில் கண்டால்,
சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
v தற்கொலை செய்து கொள்வதை போல்
கனவு கண்டால் நொருங்கி வந்த
ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
v உயரத்தில் இருந்து விழுவது போல்
கனவு கண்டால் பணம், பாராட்டு
குவியும்.
v கர்ப்பிணியை கனவில் கண்டால்
பொருள் வந்து சேரும், நலம்
அதிகரிக்கும்.
v ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ்
உயிரினங்களை கனவில் கண்டால்
கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே
நிம்மதி பிறக்கும்.
v மயில், வானம் பாடியை கனவில்
கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம்
அதிகரிக்கும்.
v கழுதை, குதிரையை கனவில்
கண்டால் வழக்குகள் சாதகமாக
முடியும்.
v மாமிசம் உண்பது போல் கனவு
கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
v வாத்து, குயிலை கனவில் கண்டால்
நம் முயற்சிகள் எளிதில் வெற்றி
பெரும்.
v மலத்தை மிதிப்பதை போல் கனவில்
கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.
தீய பலன் தரும் கனவுகள்
v பூனையை கனவில் கண்டால்
வியாபாரத்தில் திடீர் என நஷ்டம்
ஏற்படும்.
v தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில்
கண்டால் வீண் செலவுகள் ஏற்படும்,
குடும்பம் பிரியும்.
v எறும்புகளை கனவில் கண்டால் மன
கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
v எலிகளை கனவில் கண்டால் எதிரிகள்
பலம் பெருகும்.
v இடியுடன் மழை பெய்வதைப் போல்
கனவில் கண்டால், உறவினர்கள்
விரோதியாவார்கள்.
v பசு நம்மை விரட்டுவதை போல்
கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு
வியாதி சூழும்.
v புயல் காற்று, சூறாவளி
ஆகியவற்றை கனவில் கண்டால் நோய்
உண்டாகும்.
v குதிரையில் இருந்து விழுவதை
போல் கனவு கண்டால் கொடிய
வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
v நோய் பீடித்ததாக கனவு கண்டால்,
நண்பர் ஏமாற்றுவார்.
v ஊனமாவதை போன்று கனவு கண்டால்
சோகமான செய்தி வந்து சேரும்.
v நிர்வாண கோலத்தை கனவில் கண்டால்,
அவமானம் தேடி வரும்.
v முட்டை சாப்பிடுவது கனவு
கண்டால் வறுமை பிடிக்கும்.
v முத்தமிடுவது போல் கனவு கண்டால்
செல்வாக்கு சரியும்.
v சமையல் செய்வது போல் கனவு
கண்டால் அவமானம் வந்து சேரும்.
v பழம் சாப்பிடுவது போல் கனவு
கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
v காக்கை கத்துவது போல் கனவு
கண்டால் திருட்டு நடக்க
வாய்ப்புள்ளது.
அந்த வகையில், கனவுகள்
தோன்றுவதற்கும், அதற்கு உள்ள
தொடர்பு குறித்தும் இங்கே
காணலாம்..
கனவில் ஆலயம் தோன்றுதல் மிகவும்
நல்லது. அவ்வாறு கனவு காண்பவர்
செய்யும் தொழில் வளர்ந்தோங்கும்:
தருமப் பணியால் புகழ் உண்டாகும்.
தெய்வத் திருவுருவம் இல்லாத ஆலயம்,
அல்லது பாழடைந்த ஆலயம் கனவில்
தோன்றினால் தொழில் நலிவடையும்.
புகழ் கெடும்.
ஆலயத்துக்குள் சென்று இறைவனை
வழிபடுவது போன்று கனவு
தோன்றினால் எடுத்த காரியம் இனிதே
நிறைவேறும்.
கனவில் அரண்மனையைக் கண்டால் அது
நல்ல பலனைத் தரும் என்று
கூறப்படுகிறது. அவ்வாறு கனவு
காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்.
பூர்வீக சொத்து வந்து சேரும்.
பரிசுகளை வெல்வார்கள். போட்டிப்
பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம்
கிடைக்கும்.
அடுக்கடுக்காய் வழை இலைகளை
கனவில் கண்டால் அடுத்து வரும்
நாட்களில் உங்களுக்கு நன்மைகள்
நடைபெறும். தான் வாய்விட்டு
அழுது கொண்டிருப்பது போல் கனவு
தோன்றினால் எதிர்கால வாழ்க்கையில்
இடையூறுகள் உண்டாகும்.
தன்னை அலங்கரித்துக் கொள்வது
போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு
கண்டவர் செய்யும் தொழிலில் நட்டம்
ஏற்படும். தன்னைப் பிறர் அலங்கரிப்பது
போலக் கனவு கண்டால் நண்பரால்
நம்பிக்கை மோசடிக்கு ஆளாக
நேரிடும்.
பிறரை அவமரியதை செய்வது போலக்
கனவு கண்டால் கைகூடாமல் இருந்த
காரியங்கள் இனி கைகூடிவரும்.
தன்னைப் பிறர் அவமரியாதை செய்வது
போலக் கனவு கண்டால், சிறி சிறு
தொல்லைகளும், துன்பங்களும்
வரக்கூடும். தான் பெரியோர்களை
அவமரியாதை செய்வது போலக் கனவு
கண்டால், அவ்வாறு கண்டவரது
முதலுக்கு மோசம் வரும்.
பச்சைக் கிளி கனவில் வந்தால், புதிய
நட்பு கிடைக்கும் என்றும், பச்சைக்
கிளி பறப்பது போல கனவு கண்டால்,
வாழ்கையில் முன்னேற்றம் என்றும்
நம்பப்படுகிறது.

2 comments:

  1. ருத்ராட்சம் மாலை அணிவது போல கனவு கண்டேன். அதன் பலன் என்னவென்று தெரிவிக்கவும் ஐயா

    ReplyDelete