Tuesday 28 April 2015

27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்


உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.



அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

ஜீவசமாதி ஓர் அறிமுகம். {பாகம் -3}


---------------------------------------------------------
சிவ சிவ சிவ சிவ நமசிவாய........
........
தத்துவல்ய சமாதி...
--------------------------------
கொங்கணவர் தனது “கொங்கணவர்
வாதகாவியம்” நூலில் அருளிய
ஆறு
வகையான சமாதி நிலைகளைப்
பற்றி
நேற்றைய பதிவில் பார்த்தோம்.
இன்று முதல்
வகையான தத்துவல்ய சமாதி நிலை
பற்றி
பார்ப்போம்.
"தானான சமாதியாறு குணத்தைக்
கேளு
தத்துவல்ய சமாதியொன்று
சாற்றுவேன்யான்
கானான தத்துவங்காண்
முப்பதாறுங்
கலந்தூத பௌதிகத்தைச் சூட்சுமதத்
திலடக்கி
நானான சூட்சுமத்தை யழித்து
நன்றாய்
நம்பெரிய வரசனைப்போ லாக்கின்
மைந்தா
வானான காரணமாஞ் சரீரத்தில டக்கி
மருவியதைப் பிரகிருதி யிலே
மருவப்
பண்ணே"
- கொங்கணவர் -
"பண்ணினதோர் புருடனையுந்
திட்டான்பான
பரவிநின்ற சைதன்ய மாகக் கண்டு
கண்ணினதோர் கர்த்தனிக ரழித்
தொன்றேயாகிக்
காற்றசையா வறையினின்ற
விளக்குப் போல
ஒண்ணினதோ ரலைச்சலற்
றேயகண்டந்தானா
யொன்றாலு மலைச்சலற்றுத் தானே
தானாய்
பண்ணினதோர் கரைதனித்து ஒன்றே
யாகிப்
பந்தமற்றது தத்துவலய சமாதி
யாச்சே"
- கொங்கணவர் -
இருக்கிற எல்லாவற்றிற்கும்
சாட்சியாக நாமே
சீவனாகவும், பிரபஞ்சமாகவும்,
உள்ளாகவும்,
வெளியாகவும் நிற்கிறோம்.
மேலும்
சங்கற்பம், விகற்பம் போன்றவைகளை
கடந்து
ஆதிகாரணமாக ஞானமாகவும்
நிற்கிறோம்.
இது போலவே மாயையாகவும்,
முக்காலமாகவும் ஆகாசம் போல்
எங்கும்
பரவி நிறைந்து நிற்கிறோம்.
இப்படியான முப்பத்தாறு வகை
தத்துவங்களைக் கொண்ட
இப்பௌதிக
தேகத்தை சூட்சுமத்தில் அடக்கி,
அந்த
சூட்சமத்தை அழித்து அதனை
காரணத்தில்
அடக்கி, இந்த காரணத்தை
மூலப்பிரகிருதியில்
லயப்படுத்தி, அப்பிரகிருதியை
சுத்த
சைதந்யமாகவும் எங்கும்
வியாபித்தவனாகவும் உணர்ந்து
கொள்வதுடன் எல்லாம் என்று
தெளிந்து
அனைத்து பந்தங்களையும் அகற்றி
நிற்பதே
தத்துவல்ய சமாதியாகும்.
கொஞ்சம் சிக்கலான விளக்கம்தான்...
இதனை
எளிமைப் படுத்தி எழுதினால் நான்
என்பதை
கரைத்து, தாமே எல்லாவற்றிலும்
நிறைந்தும்,
மறைந்தும் நிற்பதை உணர்ந்த ஒரு
உயர்
நிலையாக கூறப் படுகிறது.
சவிகற்ப சமாதி...
---------------------------
கொங்கணவர் அருளிய ஆறு
வகையான சமாதி
நிலைகளில் இன்று இரண்டாவது
வகையான
சவிகற்ப சமாதி நிலை பற்றி
பார்ப்போம். இந்த
சமாதி நிலை என்பது யோகத்தின்
மிக உயர்ந்த
நிலையாகும். வெறும்
வார்த்தைகளால்
இவற்றை விவரித்து
உணர்த்துவதும்,
உணர்வதும் கடினமானது. இவை
யாவும்
உணர்ந்து அறிந்து அனுபவிக்க
வேண்டிய
அதி உயர்நிலைகள். எனவே எனது
இந்த
முயற்சியினை ஒரு தகவல்
பகிர்வாக மட்டும்
கருதிட வேண்டுகிறேன்.
வாருங்கள்!, சவிகற்ப சமாதி பற்றி
கொங்கணவர் கூறியுள்ளதைப்
பார்ப்போம்.
"ஆச்சப்பா சவிகற்பச் சமாதி கேளு
அடுத்தாக்கால் ரெண்டுவகை
யதிலேயுண்டு
வாச்சப்பா சத்தானு
வித்தையொன்று
வரிசையுடன் திரையவித்தைச்
சமாதியொன்று
போச்சப்பா சத்தானு வித்தை
மார்க்கம்
பெரியதொரு தத்துவலய
சமாதிக்குள்ளே
ஓச்சப்பா சத்தங்கள் பட்சியோசை
வுன்மனத்தே படுகிறது
உயிர்ப்புக்கேளே"
- கொங்கணவர் -
"கேளப்பா சத்தானு
வித்தையென்றுங்
கெடியான சவிகற்பச்
சமாதியென்றும்
வாளப்பா திரிசானு
வித்தைமார்க்கம்
வகைசொல்வே னன்றாகக்
கேளுமக்காள்
நாளப்பா நின்றநிலை
சமாதிக்குள்ளே
நலமாகத் தன்னையனு
சந்தானித்துத்
தாளப்பா சஞ்சரிக்கில் திரிசானு
வித்தை"
- கொங்கணவர் -
உயர்வான இந்த சவிகற்ப
சமாதியானது
நேற்றைய பதிவில் நாம் பார்த்த
தத்துவலய
சமாதி நிலையின் மற்றொரு
வடிவாகக்
கூறுகிறார். இந்த சுவிகற்பச்
சமாதி இரண்டு
வகைகளாக கூறப் படுகிறது.
அவையாவன
“சத்தானு சமாதி” , “திரைய சமாதி”
என்கிறார்
கொங்கணவர்.
தத்துவலய சமாதி நிலையில்
இருக்கும்
போது தன்னுள்ளே பட்சியின் ஓசை
எழும்புவதை உணர்ந்து அதில்
லயப்பட்டிருப்பதே சத்தானு சமாதி
எனப்படுமாம்.
தத்துவலய சமாதி நிலையில்
தன்னைத்
தானே அனுசந்தானம் செய்து
நிற்றலே திரைய
சமாதி என்கிறார்.
நிருவிகற்ப சமாதி..
------------------------------
நிருவிகற்ப சமாதி குறித்து
கொங்கணவர் பின்
வருமாறு கூறுகிறார்...
"பேரான நிருவிகற்ப சமாதிகேளு
பெருத்து நின்ற தத்துவலய
சமாதிமுத்தி
தாரான சத்தானு வித்தை முத்தி
தனைமறந்து தூக்கமுற்ற
மயக்கம்போல
வாரான சத்தமொன்றுங்
காதிற்கேட்கா
மருவியிந்த பூரணத்தே சித்தமப்பா
நேரான சைதன்ய மாகப்போனால்
நிருவிகற்ப சமாதியென்ற
நேர்மையாச்சே"
- கொங்கணவர் -
"ஆச்சப்பா சமாதிவிட்டுச் சஞ்சரிக்கி
லடவாகச் சமாதியிலே
யிருக்கும்போது
காச்சப்பா காலமென்ற
திரயத்தினுள்ளுங்
கண்டிருந்த பிரபஞ்சமெல்லாம் பொய்
யென்றெண்ணு
வீச்சப்பா விவகாரத் தாலே தோன்றி
விரிந்துநின்ற பிரபஞ்சத்தின்
பாசந்தள்ளி
ஒச்சப்பா நிருவிகற்ப மாகி நின்றா
லுத்தமனே நிருவிகற்ப மிதுவே
யாச்சே."
- கொங்கணவர் -
முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த
தத்துவலய சமாதியம், சத்தானு
சமாதியும்
முழுமையாக சித்தியாகி
விட்டால், தன்னை
மறந்த துக்கத்தைப் போல் ஒரு மயக்க
நிலை
ஏற்படுமாம்.இந்நிலையில் எந்த ஒரு
சத்தமும்
அவர்களுக்கு கேட்காதாம்.
சுத்தமானது
பூரணத்துடன் சேர்ந்து சுத்த
சைதந்ய
நிலையை அடைந்துவிடும்
என்கிறார். இந்
நிலைக்கே நிருவிகற்ப சமாதி
பெயர்.
மேலும்,சமாதியை விட்டு எழுந்த
பிறகும்,
சமாதியிலிருக்கும் பொழுதும்
காலத்திற்குட்பட்டு இயங்கும் இப்
பிரபஞ்சமெல்லாம் பொய் என்றும்,
இவை
யாவும் மாயா விகாரத்தால்
தோன்றியது என
எண்ணி இவற்றின் மேலுள்ள
பாசத்தை நீக்கி
எதையும் நினைக்காமல் இருத்தலே
முழுமையான நிருவிகற்ப
சாமாதியாகும்
என்கிறார் கொங்கணவர்.
அகண்டவிர்த்தி சமாதி..
--------------------------------------
சமாதி வகைகளில் நாண்காவது
நிலையான
அகண்டவிர்த்தி சமாதி பற்றி
கொங்கணவர் பின்
வருமாறு கூறுகிறார்.
"நன்றான வகண்டவிர்த்தி யாவதப்பா
நலம்பெரிய காற்றில்லா விளக்குப்
போல
அன்றான வலைச்சலற்றுத்
தண்ணீருமுப்பு
மடங்கிநின்ற வாறதுபோன் முத்தி
நிற்குந்
தன்றான பிறமனதி னுருத்தான்
கெட்டுத்
தனிப்பெறவே வேற்றுருவாய்ப்
பிரமந்தானாய்
பன்றான விப்படிதான்கடிக
ையொன்று
பருவமுடன் சமாதியற்றார் பலத்தைக்
கேளே"
- கொங்கணவர் -
"பலன்கேளு அசுவமேத
யாகங்கோடி
பண்ணினதற் கொக்கு மொக்கும்
பரிந்துகூடு
நிலன்கேளு யிப்படிதான் சமாதி
மூட்டில்
நிலையாகச் சுழுத்தியென்றேய
ெண்ண வேண்
தலன்கேளு சுழுத்திக்குச்
சித்தந்தானுந்
தயங்கிநின்று நின்றுற்று நசித்துப்
போகும்
புலன்கேளு சமாதிக்கு நாம்
பிரமமென்று
புடவாக வதிலிருந்து யிருக்கும்
பாரே"
- கொங்கணவர் -
இந்த அகண்டவிர்த்தி சமாதி
நிலையானது
எப்படி இருக்குமென்றால்
காற்றில்லாத
இல்லத்தில் வைக்கப்பட்ட ஒரு
விளக்கின்
சுடரைப்போலவும், தண்ணீரில்
கரைக்கப்பட்ட
உப்பைப் போலவும் யோகத்தில்
மனமானது
முதிர்ந்து நிற்க்குமாம். இந்த ஆனந்த
நிலையில் ஒரு கடிகை நேரம்
லயித்தாலும்
கிடைக்கும் பலன்கள் அதிகம்
என்கிறார். அந்த
பலன்களை பின் வருமாறு
பட்டியலிடுகிறார்
கொங்கணவர்.
கோடி அஸ்வமேத யாகம் செய்த பலன்
கிடைக்குமாம். மேற் சொன்னவாறு
தினமும்
பழகி வந்தால் மனமானது
சுழித்தியில்
அடங்குமாம். இதை வெறும் சுழித்தீ
தானே
என்று எண்ணி கைவிட்டு விடாமல்
சரியாக
தொடர்ந்து செய்து வந்தால்
அனைத்துமே
சித்தத்தில் அடங்குமாம் அப்படி
சித்தத்தில்
அடங்கி பின் சித்தமும் பிரம்மத்தில்
அடங்குமாம். அப்போது நீயே
பிரம்மம்
என்பதை அறிவாய் என்கிறார்.
இதுவே
அகண்டவிர்த்தி சமாதி யாகும்.
சஞ்சார சமாதி..
------------------------
கொங்கணவர் அருளிய ஆறு
வகையான சமாதி
நிலைகளில் இன்று ஐந்தாவது
வகையான
“சஞ்சார சமாதி” பற்றி பார்ப்போம்.
இதனை
பின் வருமாறு கூறுகிறார்
கொங்கணவர்.
"இருக்கிற தாகையினால்
ரெண்டுக்கும் பேத
மியல்பான வகண்டவிர்த்தி சமாதி
மார்க்கந்
தருக்கிறதோர் சஞ்சார சமாதி
கேளு
சார்ந்து நின்ற வகண்டவிர்த்தி
விட்டேயப்பா
வருக்கிறதா யெழுந்திருந்து
பிரபஞ்சத்தைப்
பார்த்தே
யடைவாக விவகரிக்குங்
காலமெல்லா
மருக்கிறதோர் பிரபஞ்ச மெல்லாஞ்
சமுத்திரத்
தலைபோல்
மருவிநின்ற நுரைபோல
மாயந்தானே"
- கொங்கணவர் -
மாயமுற்றுச் சிலந்தியி
னல்வலையைப்போல
மயங்கிநின்ற கூர்மத்தி
னங்கம்போலத்
தோயமுற்ற வாகாச மேகம்போலச்
சொப்பனமாம் பிரபஞ்சத்தி லறிவைப்
போல
வாயமுற்று நம்மிடத்தே
யுண்டாச்சப்பா
வாச்சரிய நம்மிடத்தே
யிருந்துகொண்டு
காயமுற்று அறிவழிந்து
போறதாலே
கலந்து நம்மை விடவொன்றுங்
கண்டிலேனே"
- கொங்கணவர் -
நேற்றைய பதிவில் விவரித்து
இருந்த
அகண்டவிர்த்தி சமாதியை விட்டு
எழுந்து
வெளியுலகமான பிரபஞ்சத்தில்
உலாவும்
போதும், பிரபஞ்சத்தில் கடமைகள்
மற்றும்
வேலைகளில் ஈடுபடும் பொழுதும்
சமுத்திர
அலையால் உண்டான கடல்
நுரையைப் போல
அனைத்துமே மாயை என்பதை
நினைவில்
கொள்ளல் வேண்டும்.
சிலந்திப் பூச்சியானது தான்
உருவாக்கும்
ஒருவகையான பசைத்தன்மை
கொண்ட
பொருளால் வலையை உண்டாக்கிக்
கொண்டு
அதில் தானே அதில் வசிப்பதை
போலவும்,
கூர்மம் என்று அழைக்கப்படும்
ஆமையானது
தன்னுடன் தோன்றிய ஓட்டினுள்
தன்னை
அடக்கிக் கொள்வது போலவும்,
கனவு
போன்ற இந்த பூலோகவாழ்கை
அழிவடையும்
தன்மை உடையது என்றும் உணர்ந்து,
என்னை
தவிர வேறொன்றும் இல்லை
என்பதை
நினைவில் நிறுத்தி பூலோக
வாழ்வியல்
விவகாரங்களில் ஈடுபடும்போது
எதுவும்
உன்னை சலனப்படுத்தாது என்பதை
உணர்ந்திருக்கும் நிலையே சஞ்சார
சமாதி
என்கிறார்.
ஆருட சமாதி...
------------------------
கொங்கணவர் அருளிய ஆறு
வகையான சமாதி
நிலைகளில் இன்று இறுதி
நிலையாக கூறப்
பட்டுள்ள “ஆரூட சமாதி” பற்றி
பார்ப்போம்.
இந்த நிலையினை பின்வருமாறு
விவரிக்கிறார்
கொங்கணவர்...
"அணைந்து முன்னே தேவதைகள்
வந்தாலுந்தான்
அதைச்சட்டை பண்ணாதே
யகண்டமாய் நில்
லணைந்து நின்ற வத்துவித
நெறியிற்கூடி
யப்பனே சஞ்சார சமாதிக்குள்ளு
மணைந்து நின்று திடப்பட்டாற்
பின்புகேளு
அப்பனே சகலத்தி லசத்தியம் போக்கி
யணைந்துநின்று சுட்டசட்டி
விட்டாற் போலே
யாச்சரியந் தேவதைக ளசத்தாய்க்
காணே"
- கொங்கணவர் -
"அசத்ததாகக்தேவதையை
மனதிலெண்ணி
யசையாத மலைபோலே
யசைவுமற்று
நிசத்தான காற்றுப்போல் தேவதைக
ளென்று
நிச்சயித்து நன்றாக நில்லு நில்லு
பசத்தான வத்துவித
நிலைநாமென்று
பாராகத் திடப்பட்டு நில்லுநில்லே
உசத்தாகச் சாதகத்தி நிலையைக்
கூட்டி
யுத்தமனே யாரூட சமாதியாச்சே"
- கொங்கணவர் -
உலகில் இருக்கும் அனைத்துப்
பொருட்களும்
என்னிடம் இருந்தே உண்டாயிற்று,
நான் தான்
அனைத்து பொருட்களிலும்
நிறைந்திருக்கிறேன் என்பதாக
உணர்வதுடன்,
தானே பிரம்மம், தானே
அனைத்திற்க்கும்
ஆதாரமானவன் என்ற உயரிய
நிலையில்
இருந்துகொண்டு, உன் முன்னால்
தேவதைகள்
தோன்றினாலும் கூட அவற்றை
பொருட்
படுத்தாமல் நீயே பிரம்மமாய்
இருக்கும்
நிலையான சஞ்சார சமாதியில்
எல்லாம்
மாயை என்பதை தெளிந்த பின்னர்
மேலான
தேவதைகள் முதல் வேறு எவரும்
உன்
முன்னால் வந்து நின்றாலும்
அவற்றை
காற்றைப் போல் நினைத்து அவை
அனைத்துமே உன்னிடம் இருந்து
தோன்றியதே
என்ற உண்மையை உணர்ந்து மலை
போல
அசைந்து கொடுக்காது நீயே
பிரம்மம் என்ற
நிலையில் இருத்தல் ஆருட சமாதி
எனப்படும்.
இதுவே இறுதி முடிவான
நிலையும் ஆகும்
என்கிறார் கொங்கணவர்.
யோகத்தின் மிக உயரிய நிலையில்
கூட
இத்தனை படி நிலைகள்
இருக்கின்றன என்பது
ஆச்சர்யமான தகவல்தானே... என்
வயதிற்கு
இதெல்லாம் மிகப் பெரிய
விஷயங்கள்.
இவற்றை முழுதாய் உணர்ந்து
எழுதிடும்
மனப் பக்குவம் எனக்கு இன்னமும்
வரவில்லை. அதற்கான பயணம் மிக
நீண்டது.
இத்துடன் இந்த தொடர் நிறைவுக்கு
வருகிறது. வேறொரு தகவலுடன்
அடுத்த
பதிவில் சந்திக்கிறேன்.

Monday 27 April 2015

ஜீவசமாதி ஓர் அறிமுகம். {பாகம் -2}


---------------------------------------------------------
சிவ சிவ சிவ சிவ நமசிவாய........
........
தவயோகத்தில் சிறந்த ஞானியர் உலக
வாழ்க்கையில் தங்களுடைய
கடமைகள்
முழுமை அடைந்ததாக கருதிடும்
போது
மேலான இறை நிலையோடு
தம்மை
ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த
நிலையில் அவர்தம் உடல் இயக்கமும்,
மன
இயக்கமும் நின்று
விட்டிருப்பினும், உயிர்
மட்டும் உடலை விட்டு
பிரியாதிருக்கும்.
இத்தகைய உயர்நிலை அடைந்த
ஞானியரின்
உடலுக்குச் செய்திட வேண்டிய
சமாதி
கிரியைகளை இது வரை
பார்த்தோம்.
இதன்படி ஞானியரை குழியில்
பத்மாசனத்தில்
அமர்த்தி பரிவட்டம் சாற்றி
திருவெண்ணீறு,
நறுமண சுண்ணப் பொடி, தர்ப்பைப்
புற்கள்,
வில்வ இலைகள், மலர்களைக்
கொண்டு
குழியை முழுவதுமாய் நிரப்பிட
வேண்டும்
என பார்த்தோம். எக்காரணம்
கொண்டும்
மணலைக் கொண்டு மூடக்கூடாது.
தரை
மட்டம் வருமளவுக்கு மேலே
சொன்ன
பொருட்களைக் கொண்டு குழியை
நிரப்பிய
பின்னர், நிறைவாக பாத்தியம்,
ஆசமனம்,
அர்க்கியம் தந்து நிலத்தின் மேல்
மூன்று அடி
அகலம், மூன்றடி உயரத்தில் மேடை
அமைக்க
வேண்டும் என்கிறார் திருமூலர்.
இப்படி அமைக்கப் பட்ட மேடையின்
மீது அரச
மரக் கன்று அல்லது சிவலிங்கம்
ஒன்றினை
ஸ்தாபிக்க வேண்டுமாம். இப்போது
இது
மாதிரியான அமைப்புடைய
மேடைகளை
பல்வேறு இடங்களில் பார்த்த
நினைவு
உங்களுக்கு வரலாம். ஆம், அவை
எல்லாம்
ஞானியரின் ஜீவசமாதிகளே, காலப்
போக்கில்
அவை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்த
தலைமுறையினருக்க
ு சென்றடையாமல்
கைவிடப் பட்ட நிலையில்
இருக்கின்றன.
திருமூலர் தான் அருளிய வழியில்
முறையாக
அமைக்கப் பட்ட ஜீவசமாதி உள்ள
இடத்தில்
அந்த ஞானியரின் எண்ண ஆற்றல்கள்
அவரின்
உடலை விட்டுப் பிரியாது
அவ்விடத்தே
சூட்சுமமாய் நிறைந்திருக்குமாம்.
மேலும்
அந்த இடத்திற்கு வருவோரையும்,
வழிபடுவோரையும் ஞானியரின்
எண்ண
ஆற்றல் வழி நடத்தும் என உறுதி
கூறுகின்கிறார்.
நண்பர்களே!, இத்தனை புனிதம்
வாய்ந்த ஜீவ
சமாதிகள் நமது நாட்டில் நிறைய
இருக்கின்றன. அவற்றின்
மகத்துவத்தை
உணராதவர்களாகவே நாம்
இருக்கிறோம்.
இத்தகைய தவசீலர்களை
வணங்குவதன்
மூலம் அவர்களின் அருளுக்கு
பாத்தியமாக
முடியும். தொடர்ந்து இந்த ஜீவ
சமாதிகளை
வணங்கி வந்தால் நாடு வளம்
பெறுவதுடன்,
நாட்டு மக்களுக்கும் நல்லருள்
கிடைக்கும்.
ஜீவசமாதி - சில குறிப்புகள்.
-------------------------------------------
ஜீவசமாதி குறித்த விவரங்கள்
பலருக்கு
புதிய தகவலாய் இருந்திருப்பதை
பின்னூட்டங்கள் மற்றும் தனி
அஞ்சல்களின்
வாயிலாக அறிய முடிந்தது. இந்த
தகவல்கள்
யாவும் காலகாலமாய்
ஏடுகளிலும்,
நூலகங்களில் தூங்கிக்
கொண்டிருக்கும்
தகவல்களே, இதை பகிர்வதில்
எனக்கென
பெருமை எதுவுமில்லை.இப்படி
ஒரு
வாய்ப்பினை எனக்கு அருளிய
எல்லாம் வல்ல
குருவுக்கே அத்தனை புகழும்
சேரும்.
இந்து மரபியலில் ஜீவசமாதியின்
முக்கியத்துவம் தெளிவாக
வரையறுத்து
கூறப் பட்டிருக்கிறது. எனினும்
ஜீவசமாதி
என்பது குறிப்பிட்ட எந்த ஒரு
மதத்திற்குமானது இல்லை.
தமிழகத்தில்
இஸ்லாம் மற்றும் கிருத்துவ
ஞானியரின்
அடக்கத் தலங்கள் புகழ்பெற்ற வணக்கத்
தலமாய் இருப்பதை இதற்கு
உதராணமாய்
காட்டிட முடியும். ஞானத்தின் உச்ச
நிலை
எய்திய ஒருவரை இன்ன மதத்தவர் என
அடையாளம் காட்டிக்
கொண்டிருக்கத் தேவை
இல்லை என்பது என்னுடைய
தாழ்மையான
கருத்து.
ஞானியரின் ஜீவசமாதியில் ஒரு
விளக்கேற்றி
வைத்து, மனதை ஒரு முகப் படுத்தி
தியானத்தில் அமர்ந்திருந்தால
ே அவர்களின்
அருளுக்கு பாத்தியமாக
முடியும். ஆனால்
தற்காலத்தில் இவை எல்லாம்
புறக்கணிக்கப்
பட்டு வழிபாடுகள், ஆராதனைகள்
என
சடங்குகள் சார்ந்த ஒரு வைபவமாக
மாற்றப்
பட்டுவிட்டது வருந்தத் தக்கது.
எமது நாட்டிலும் கூட பல
ஞானியரின்
ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.
கடந்த
காலத்தின் அசாதாரண
நிகழ்வுகளினாலும்,
தற்போதைய அரசியல்
சூழலினாலும்
அவற்றில் பல அழிந்ந்தும்,
பராமரிப்பு அற்றும்
போய்விட்டன. எஞ்சிய ஒரு சில
ஜீவசமாதிகள்
அருளாளர்களினால் போற்றிப்
பாதுகாக்கப்
பட்டு வருகிறது.
சமாதி நிலை என்பது எந்த வித
எண்ணங்களும் இல்லாது கண்களை
மூடி
அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில்
பலரும்
புரிந்து கொண்டிருக்கிறோம்.
உண்மையில்,
சமம் + ஆதி = சமாதி, அதாவது
ஆதியும்
அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை
நிலைக்கு சமனான ஒன்றுமற்ற
அல்லது
வெறுமையான மனநிலையில்
இருப்பதே
சமாதி எனப்படும்.
இன்னொரு வகையில்
சொல்வதானால்,
கண்ணை திறந்து கொண்டு
அனைத்து
நிகழ்வுகளிலும் பங்கேற்று
கொண்டே,
உள்ளார்ந்த விழிப்புணர்வுடன்
"நான்" "எனது"
"என்னுடையது" என்ற அகங்காரம்
இல்லாத
பக்குவமும் சமாதி நிலையாக
சொல்லப்
படுகிறது.
இதனை திருமூலர் தனது
திருமந்திரத்தில்
பின் வருமாறு கூறுகிறார்.
"சமாதி யமாதியிற் றான்செல்லக்
கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச்
சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க்
கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே"
- திருமந்திரம் -
"சமாதிசெய் வார்க்குத் தகும்பல
யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுடன்
னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும்
எய்துமே"
- திருமந்திரம் -
இந்த நிலை எல்லோருக்கும்
சாத்தியமில்லை.
குருவருளுடன் கூடிய
விடாமுயற்சியும்,
பயிற்சியுமே இந்த நிலைக்கு
இட்டுச்
செல்லும். பதஞ்சலி முனிவர் தனது
பதஞ்சலி
யோகம் என்னும் நூலில் சாமாதி
நிலைக்கு
இட்டுச் செல்லும் எட்டுப்
படிநிலைகளின்
வகைகளை விரிவாக
அருளியிருக்கிறார். அது
தொடர்பான பதிவுகளை இந்த
இணைப்பில்
வாசிக்கலாம்.
கொங்கணவர் தனது “கொங்கணவர்
வாதகாவியம்” என்ற நூலில் சமாதி
நிலைகளைப் பற்றி விரிவாக
விளக்கியிருக்கிறார்.
ஆறுவகையான சமாதி
நிலைகள் இருப்பதாக கொங்கணவர்
குறிப்பிடுகிறார்.
அவையாவன...
தத்துவல்ய சமாதி
சவிகற்ப சமாதி
நிருவிகற்ப சமாதி
அகண்டவிர்த்தி சமாதி
சஞ்சார சமாதி
ஆரூட சமாதி
இனிவரும் பதிவுகளில் இவற்றைத்
தனித்தனியாகவும்,
விளக்கமாகவும்
பார்ப்போம்.

ஜீவசமாதி ஓர் அறிமுகம். {பாகம் -1}


---------------------------------------------------------
சிவ சிவ சிவ சிவ நமசிவாய.............
சித்தர்கள், யோகிகள், ஞானிகள்
போன்ற உயர்
தவநெறியாளர்களின் உடலை அடக்கம்
செய்வித்த இடமே ஜீவசமாதி என
பொதுவாக
அழைக்கப்படுகிறது. இந்து ஞான
மரபில் இந்த
ஜீவ சமாதிகள் கோவில்களுக்கு
இணையான
புனிதத் தன்மை உடையவையாக
கருதப்
படுகிறது. நம்மில் பலரும் ஜீவ
சமாதி
என்றால் ஞானியரை உயிருடன்
புதைக்கப்
படுதல் என்றே நினைத்துக்
கொண்டிருக்கின்றனர். ஆனால் அது
மிகவும்
தவறான கருத்து என்கிறார்
திருமூலர்.
ஜீவசமாதிகள் அமைந்திருக்கும்
இடத்திற்குச்
சென்றால் அனைத்தையும் மறந்த
ஏகாந்த
உணர்வு உண்டாகிறது. மனம்
அமைதியில்
திளைக்கிறது. சிலிர்ப்பூட்டும்
அதிர்வலைகளை உணர முடிகிறது.
நோயுற்றவர்களின் நோய்
தீருகிறது.
வேண்டுதல் நிறைவேறுகிறது.
வாழ்வில்
மாற்றம் உண்டாகிறது என பலரின் பல
விதமான அனுபவங்களை
கேட்டிருப்போம்.
இத்தனை சிறப்புக்களை தன்னகத்தே
கொண்டிருக்கும் ஜீவசமாதியின்
தத்துவம்
மற்றும் அதன் அடியாதாரங்களை
பகிர்வதே
இந்தக் குறுந்தொடரின் நோக்கம்.
ஞானியர் மேலான தவம் மற்றும்
கடுமையான
ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன்
மூலம்
தமது உடலையும், உயிரினையும்
தூய்மையாக பேணி வருகிறவர்கள்.
இன்னும்
தீர்க்கமாய் சொல்ல வேண்டுமெனில்
உடலையும், உயிரையும்
புனிதமான
கோவிலைப் போல கருதி
தனித்துவமான
வாழ்வியல் கூறுகளை
அனுசரிக்கிறவர்கள்.
இத்தகைய மேன் மக்கள், இந்த உலக
வாழ்க்கையில் தங்களுடைய
கடமைகள்
முழுமை அடைந்ததாக கருதும்
நிலையில்
தம்மை இறைவனோடு
ஐக்கியப்படுத்திக்
கொள்கிறார்கள்.
இந்த நிலையில் அவர்களின் உடல்
இயக்கமும்,
மன இயக்கமும் நின்று
விட்டிருப்பினும், உயிர்
மட்டும் உடலை விட்டு
பிரியாதிருக்கும்
என்கிறார் திருமூலர். இத்தகைய
நிலையே
ஜீவ சமாதி என்கிறார். ஜீவ சமாதி
என்பதை
ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆன்மா
தனது
ஆதி வடிவத்திற்கு சமனாக உயர்வது
என
பொருள் கொள்ளலாம். இந்த உயரிய
நிலையில் ஞானியரின் உடல்
என்றும்
கெடாமல் இருக்குமாம்.
இப்படி ஆதிக்கு சமன் ஆகி விட்ட
ஞானிகளை
இறைவனாகவே கருத வேண்டும்
என்றும்,
அத்தகைய மேன் மக்களை அவரின்
சீடர்களின்
உதவியோடு பிரத்தியேகமான
சடங்குகளை
செய்வித்து அவர்களின் உடலை
சமாதி செய்ய
வேண்டும் என்கிறார் திருமூலர்.
இவ்வகை
சடங்கிற்கு "சமாதிக் கிரியை"
என்று பெயர்.
இந்த சடங்கு விவரங்களை தனது
திருமந்திரத்தில் விரிவாகவே
கூறியிருக்கிறார்.
ஜீவசமாதி - ஏன்!, எதற்கு!, எங்கே!
------------------------------------------------------
தவயோகத்தில் சிறந்து தெளிந்த
ஞானியரின்
உடலை ஜீவ சமாதி அமைத்திட
வேண்டியதன்
அவசியத்தை மற்றெவரையும் விட
திருமூலர்
வலியுறுத்திக் கூறுகிறார்.
அதற்கான காரண
காரியங்களும் அவரது பாடல்களின்
ஊடே நாம்
காணக் கூடியதாக இருக்கிறது.
அதனை அவரது வரிகளிலேயே
பார்ப்போம்....
அந்தமில் ஞானி அருளை
அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்
திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி
யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே
புண்ணிய மாம்அவர் தம்மைப்
புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில்
அழிவாகும்
மண்ணி லழியில் மலங்காரப்
பஞ்சமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல்
மண்டியே
ஜீவ சமாதி அடைந்த ஞானியரின்
உடலை குழி
தோண்டி அதில் இருத்தி
புதைத்தலே
புண்ணியம் என்கிறார். மாறாக அந்த
உடலை
எரித்தால் பஞ்சம் ஏற்பட்டு நாட்டில்
கேடுகள்
விளைந்து, மக்களுக்குள் போர்
மூண்டு,
ஒருவரை ஒருவர் அழித்துக்
கொள்வர்
என்கிறார்.
அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும்
தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில்
நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை
யகமே
எண்ணிலா ஞானி யுடல்எரி
தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட
தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம்
பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே
ஞானியரின் உடலை புதைக்காமல்
நிலத்தின்
மேல் கேட்பாரற்று அழிந்துப் போக
விட்டாலும் அந்த நாட்டில் மழை
பொய்த்து,
பெரும் பஞ்சம் ஏற்படுமாம். அரசனும்
தன்
பதவி இழப்பான் என்கிறார்.
எனவே ஞானியரின் உடலை சமாதி
கிரியை
என்னும் சடங்குகளின் படி
புதைத்து
விடுவதே உத்தமம் . இந்த
சமாதிகளை
அமைப்பதற்கான இடங்களை
தேர்ந்தெடுப்பது
பற்றியும் திருமூலரின்
பாடல்களில்
குறிப்புகள் காணக்
கிடைக்கின்றன.
தன்மனை சாலை குளங்கரை
யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த
மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும்
இடமே
வீட்டின் அருகில், நடைபாதை, குளக்
கரை,
ஆற்றின் நடுப்படுகை, மலர்கள்
பூத்துக்
குலுங்கும் பசுஞ் சோலை, நகரின்
மத்தியில்
நல்லதோர் இடம், அடர்ந்த காடுகள்,
மலைச்
சாரல் போன்ற இடங்களில் ஜீவ சமாதி
அமைக்க உகந்த இடங்கள் என்கிறார்
திருமூலர்.
எல்லாம் சரிதான், இப்போது எப்படி
குழி
தோண்டுவது?, அதில் ஞானியரின்
உடலை
எப்படி இருத்துவது?
ஜீவசமாதி - நிலவறையும்,
சடங்குகளும்
----------------------------------------------------------------
ஜீவசமாதி பற்றிய அறிமுகம் மற்றும்
அதன்
அவசியத்தையும் இது வரை
பார்த்தோம்.
இன்று "சமாதி கிரியைகள்"
குறித்த
விவரங்களை பகிர்ந்து
கொள்கிறேன். இதன்
முதல் கட்டமாக ஞானியர் உடலை
வைக்கும்
குழியினை அமைக்க வேண்டும்.
இதனை
நிலவறை என்கின்றனர். இந்த
நிலவறையை
அமைக்கும் முறையை திருமூலர்
பின்
வருமாறு விளக்குகிறார்.
நவமிகு சாணாலே நல்லாழம்
செய்து
குவைமிகு சூழலைஞ் சாணாகக்
கோட்டித்
தவமிகு முட்குகைமுக் கோணமுச்
சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே
ஒன்பது சாணுக்கு குறையாத
ஆழமும்,
மூன்று சாண் அகலத்தில்
முக்கோண வடிவில்
குழி தோண்டிட வேண்டுமாம்.
இப்படித்
தோண்டிய மணலை குழியைச்
சுற்றி ஐந்து
சாணுக்கு அப்பால் வளைத்து
கொட்ட
வேண்டும் என்கிறார். இப்படி
அமைக்கப் பட்ட
குழியை “குகை” அல்லது “நில
அறை”
என்று அழைக்கின்றனர்.
பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட்
டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு
மாமே
நள்குகைநால் வட்டம் படுத்ததன்
மேற்காகக்
கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன்
னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே
இவ்வாறு அமைக்கப் பட்ட குழியில்
பஞ்சலோகம் மற்றும் நவமணிகளை
குழியின்
ஆழத்தில் முக்கோண வடிவில் பரப்பி,
அதன்
மீது தர்ப்பைப் புற்களை விரித்து
வெண்ணீற்றையும், பொன்னிற
சுண்ணப்
பொடியையும் கொட்டி நிரப்பி
இருக்கை
அமைக்க வேண்டும். மலர்கள், சந்தனம்,
கஸ்தூரி ஆகியவற்றுடன் சாந்து,
புனுகு,
பன்னீர் கலந்து மேலே குழியைச்
சுற்றி
சதுரமாய் தெளித்து தீபம் ஏற்றி
வைத்திட
வேண்டுமாம்.
இப்போது குழியினை அமைத்து,
அதனுள்
வைக்க வேண்டியவைகளை
வைத்தாயிற்று,
அடுத்து....
ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம்
குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின்
மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும்
பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.
சமாதி அடைந்த ஞானியின் உடல்
மீது
திருநீற்றைக் குப்பாயம் (மேல்
சட்டை) போல்
பூசிய பின்னர் அவரது உடலை
பத்மாசனத்தில் அமர்த்தி
குழியினுள் இறக்கி
வைத்திட வேண்டுமாம். இப்போது
அவரது
உடலைச் சுற்றி பூக்கள்,
அறுகம்புல்,
சுண்ணப்பொடி, திருவெண்ணீறு
ஆகியவற்றை
போட வேண்டும் என்கிறார்.
விரித்தபின் நாற்சாரும் மேவுதல்
செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம்
பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு
வீரே
மீது சொரிந்திடும் வெண்ணீறும்
சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல்
வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம்
செய்யுமே
ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
ஓதும் இரண்டினில் ஒன்றினைத்
தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலிற் கோடல் காண்உப சாரமே
மேலே சொன்ன செய்முறைகளை
எல்லாம்
செய்த பின்னர் குழியினுள்
பத்மாசனத்தில்
இருத்தப் பட்ட குருவின்
திருவடியில்
பொரிக்கை, போனகம் (உணவு),
இளநீர்
ஆகியவற்றை வைத்திட
கூறுகிறார்
திருமூலர்.அதைத் தொடர்ந்து
அவரின் முகம்,
காதணி, கண் ஆகியவைகளை மூடி,
ஞானியின் உடல் மீது பரிவட்டம்
சாற்றிட
வேண்டும். இறுதியாக
திருவெண்ணீறு,
நறுமண சுண்ணப் பொடி, தர்ப்பைப்
புற்கள்,
விலவ இலைகள், மலர்களைக்
கொண்டு
குழியை முழுவதுமாய் நிரப்பிட
வேண்டுமாம்.
ஆச்சர்யமான தகவல்தானே.....

Sunday 26 April 2015

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள்



பல கோடி டாலர்கள்
செலவு செய்து எட்டு ஆண்டுகளாக
ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர்
கால் பெருவிரலில்தான் மொத்த
பூமியின்
காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக
நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of
World’s Magnetic Equator.எந்த செலவும்
செய்யாமல்
எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல்
இதனை கண்டறிந்த நமது தமிழன்
எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?
அதை உணர்ந்து அணுத்துகள்
அசைந்துகொண்டே இருக்கும் என்ற
உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக
உணர்த்தும்படி சிலை அமைத்து
பூமியின் மையப்புள்ளியில்
மறைமுகமாக அமர்த்திய அவன்
சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000
வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து
திருமந்திரத்தில் குறிப்பிட்ட
திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..?
புரிகிறதா..? தமிழன் யார் என
தெரிகிறதா..? திருமூலரின்
திருமந்திரம் மிகப்பெரிய
உலகிற்கே வழிகாட்டும் அறிவியல்
நூலாகும் இதை உணர்ந்துகொள்ள
தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும்
ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க
தமிழ்..வெல்க... தமிழனின்
நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம்
என்று பலரும் பல
விசயங்களை கூறிவரும் வேளையில்,
அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,
பொறியியல், புவியியல், கணிதவியல்,
மருத்துவவியல் குறித்த
ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும்
ஒரு தெளிவான
சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது
, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த
பிரம்மாண்டமான
கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில
அற்புதங்களை அதனிலடங்கும். அந்த
வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்
உள்ள சில அற்புதமான ரகசியங்கள்
இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும்
இடமானது உலகின் பூமத்திய
ரேகையின் சரியான மையைப்
பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center
Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில்
ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர்
ஆலயம், காற்றை குறிக்கும்
காலஹஸ்தி ஆலயம்,
நிலத்தை குறிக்கும்
காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும்
சரியாக ஒரே நேர்கோட்டில்
அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East
தீர்க்க ரேகையில் (LONGITUDE )
அமைந்துள்ளது, இன்று Google map
உதவியுடன் நாம் வானத்தின் மேல்
இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால்
மட்டுமே விளங்கும் இந்த துல்லியம்
அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு
பொறியியல்,புவியியல் மற்றும்
வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
3) மனித உடலை அடிப்படையாக
கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்
சிதம்பரம் கோயிலில் 9
நுழைவு வாயில்களும், மனித உடலில்
இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற்
கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு
வேயப்பட்டுள்ளது, இது மனிதன்
ஒரு நாளைக்கு சராசரியாக 21600
தடவைகள் சுவாசிக்கிறான்
என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க
ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த
72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில்
இருக்கும் ஒட்டுமொத்த
நாடிகளை குறிக்கின்றது.இதில்
கண்ணுக்குத் தெரியாத உடலின் பல
பாகங்களுக்கு சக்தியை கொண்டு
சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன்
வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம்,
அதுவே சதாசிவம், அதுவே அவரின்
நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது
புறமாக
அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில்
இதயத்தை குறிப்பதாகும்.இந்த
இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற
வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர
படி" என்று அழைக்கப்படுகின்றது,
அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற
ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற
கோயில்களில் இருப்பதை போன்று நேரான
வழியாக இல்லாமல் பக்கவாட்டில்
வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4
தூண்கள் உள்ளன,இது 4
வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள்
உள்ளன, இவை 28 ஆகமங்களையும்,
சிவனை வழிபடும் 28 வழிகளையும்
குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 +
64 மேற்
பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது
64 கலைகளை குறிக்கின்றது, இதன்
குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS
BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த
நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9
கலசங்கள், 9 வகையான
சக்தியை குறிக்கின்றது.அர்த்த
மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6
சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின்
பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18
தூண்கள், 18 புராணங்களையும்
குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர்
ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம்
என்ற கோலம் "cosmic dance" என்று பல
வெளிநாட்டு அறிஞர்களால்
அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம்
இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது......

ருத்ராட்ஷம்


"ருத்திராட்சத்தின் முகமும்,
பயனும்:-

ருத்திராட்சத்தின் கீழ்மேலான
(நெடுக்குவசத்தில்) அமைந்த
கோடுகளை வைத்து அதன்
முகங்களை அறிய வேண்டும்.
1.ஒருமுகமணி: சிவஸ்வரூபம்
இதைக் கழுத்தில் அணிந்தால்
பிரமஹத்திர தோஷத்தைப்
போக்கும். இதை
அணிந்தவர்களை எதிரிகளால்
வெல்ல முடியாது.
2.இரண்டு முகமணி: சிவன், சக்தி
ஸ்வரூபம். இதனை அணிவதால்
தெரிந்தும், தெரியாமலும்
செய்த இருவினைகளும்
நீங்கும். கோஹத்தி (பசுவைக்
கொன்ற பாவம் நீங்கும்).
3.மூன்று முகமணி: சிவனின்
முக்கண். அக்னி ஸ்வரூபம்.
ஸ்திரீஹத்தி தோஷம் விலகும்.
4.நான்கு முகமணி: பிரம்ம
ஸ்வரூபம். நரஹத்தி தோஷம்
நீங்கும்.
5.ஐந்து முகமணி: காலாக்னி
ருத்திரஸ்வரூபம். தகாததை
உண்டது, தகாததைப் புணர்ந்தது
முதலிய பாவங்கள் நீங்கும்.
6.ஆறுமுகமணி: கார்த்திகேய
ஸ்வரூபம். இதை வலது கரத்தில்
அணிந்து கொண்டால்
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்,
காயதேசம் கருஅழித்தல் முதலிய
பாவங்களை நீக்கும். அஷ்ட
ஐசுவரியமும், தேக
ஆரோக்கியமும் உண்டாகும்.
தெளிந்த ஞானம் உண்டாகும்.
7.ஏழு முகமணி: ஆதிசேஷன்
அனங்க ஸ்வரூபம். சத்புத்தி,
அறிவு, ஞானம் இவற்றைக்
கொடுக்கும். கோகத்தியையும்,
பொற் களவையும் போக்கும்.
ஐசுவரியமும், ஆரோக்கியமும்
உண்டாகும்.
8.எட்டு முகமணி: விநாயகர்
ஸ்வரூபம். அன்னமலை,
பஞ்சுபொதி, சொர்ணம்,
இரத்தினம் இவைகளைத்திருடிய
பாவங்களைப் போக்கும். நீச்ச
ஸ்திரீ, குரஸ்திரீ ஆகியோருடன்
கலந்த தோஷம் நீங்கும். லட்சுமி
கடாட்சம் உண்டாகும்.
9.ஒன்பது முகமணி: கால பைரவ
ஸ்வரூபம். புத்தி முக்திகளைக்
கொடுக்கும். பிரம்மஹத்தி
முதலான பாவங்களை நீக்கி,
சிவகதி கிடைக்கச் செய்யும்.
சகல காரிய சித்தி உண்டாகும்.
10.பத்து முகமணி: ஜெனார்த்தன
ஸ்வரூபம் என்றும், எமதர்ம
ஸ்வரூபம் என்றும் கூறுவர்.
பூத பிரேத, பீசாசுக்களையும்
மரண பயத்தையும் நீக்கும்.
தசாபுத்தி தோஷங்கள் நீங்கும்.
11.பதினொரு முகமணி:
ஏகாதசருத்திர ஸ்வரூபம், பல
அசுவமேதயாகம், ராஜசுய
யாகங்கள், கோடி கன்னிகாதான
பலனையும் தரும். எப்போதும்
சௌபாக்கியம் பெருகும்.
12.பன்னிரண்டு முகமணி:
துவாதசாதித்யர் மகாவிஷ்ணு
ஸ்வரூபம், இதை வலது காதில்
அணிந்து கொண்டால் கோமேத,
அஸ்வ மேதயாக
பலனைத்தரவல்லது. கழுத்தில்
அணிந்து கொண்டால் பல
புண்ணிய நதிகளில் இத்துடன்
நீராடுவதால் அந்த நதிகள்
இதனால் புனிதமாகும்.
சுவர்ணதான பலனையும்
கொடுக்கும்.
13.பதிமூன்று முகமணி: சகலதேவ
சொரூபம், சண்முக ஸ்வரூபம்.
இதை அணிந்தால் ரசசித்தி
இராசாயண சித்தி முதலியன
சித்திக்கும். பித்ரு ஹத்தி,
மாத்ரு ஹத்தி முதலிய
பாவங்கள் விலகும். சர்வா
பீஷ்டம், சர்வ சித்தி
கொடுக்கும்.
14.பதிநான்கு முகமணி:
ருத்ரநேத்ர, சதாசிவ ஸ்வரூபம்.
இதைச்சிகையில் (குடுமியில்)
அணிந்து கொண்டவரின் உடலில்
சிவபெருமான் நீங்காமல்
இருப்பார். தேவர் ரிஷிகள்
முதலானோரை வசப்படுத்தி
சிவபதத்தையும் அளிக்கும்.
15.பதினைந்து முகமணி:
நாதவிந்து ஸ்வரூபம்.
பலகலைகளிலும்
தேர்ச்சியுறுவர். சகல
பாவங்களையும் நீக்கும்.
16.பதினாறு முகமணி:
சிவசாயுச்சிய பதவியை
அளிக்கும். 14,15,16 முகமணிகள்
கிடைப்பது அரிதாகும்.
அறுமுகமணி வலப்புயத்திலும்,
ஒன்பது முகமணி
இடப்புயத்திலும், பதினொரு
முகமணி சிகையிலும்,
பன்னிரெண்டு முகமணி
காதுகளிலும், பதினான்கு
முகமணி சிரசிலும் தரிப்பது
உத்தமம்.
ருத்திராட்சம் எத்தனை முகம்
கொண்டதாக இருப்பினும், அதன்
புனிதம் ஒருதன்மையானது.
எளிதில் கிடைக்கும்
ருத்திராட்சமணியை வாங்கி,
பால், தேன், பஞ்சகவ்யாம்,
புண்ணிய தீர்த்தத்தாலும்,
மேலான சிவலிங்க அபிஷேக
தீர்த்தத்தால் சுத்தம் செய்து,
திரியம்பகம் மந்திரம்,
திருஐந்தெழுத்தை ஓதி அணிய
வேண்டும்."
ருத்திராட்சத்தின் முகமும்,
பயனும்:-
ருத்திராட்சத்தின் கீழ்மேலான
(நெடுக்குவசத்தில்) அமைந்த
கோடுகளை வைத்து அதன்
முகங்களை அறிய வேண்டும்.
1.ஒருமுகமணி: சிவஸ்வரூபம்
இதைக் கழுத்தில் அணிந்தால்
பிரமஹத்திர தோஷத்தைப்
போக்கும். இதை
அணிந்தவர்களை எதிரிகளால்
வெல்ல முடியாது.
2.இரண்டு முகமணி: சிவன், சக்தி
ஸ்வரூபம். இதனை அணிவதால்
தெரிந்தும், தெரியாமலும்
செய்த இருவினைகளும்
நீங்கும். கோஹத்தி (பசுவைக்
கொன்ற பாவம் நீங்கும்).
3.மூன்று முகமணி: சிவனின்
முக்கண். அக்னி ஸ்வரூபம்.
ஸ்திரீஹத்தி தோஷம் விலகும்.
4.நான்கு முகமணி: பிரம்ம
ஸ்வரூபம். நரஹத்தி தோஷம்
நீங்கும்.
5.ஐந்து முகமணி: காலாக்னி
ருத்திரஸ்வரூபம். தகாததை
உண்டது, தகாததைப் புணர்ந்தது
முதலிய பாவங்கள் நீங்கும்.
6.ஆறுமுகமணி: கார்த்திகேய
ஸ்வரூபம். இதை வலது கரத்தில்
அணிந்து கொண்டால்
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்,
காயதேசம் கருஅழித்தல் முதலிய
பாவங்களை நீக்கும். அஷ்ட
ஐசுவரியமும், தேக
ஆரோக்கியமும் உண்டாகும்.
தெளிந்த ஞானம் உண்டாகும்.
7.ஏழு முகமணி: ஆதிசேஷன்
அனங்க ஸ்வரூபம். சத்புத்தி,
அறிவு, ஞானம் இவற்றைக்
கொடுக்கும். கோகத்தியையும்,
பொற் களவையும் போக்கும்.
ஐசுவரியமும், ஆரோக்கியமும்
உண்டாகும்.
8.எட்டு முகமணி: விநாயகர்
ஸ்வரூபம். அன்னமலை,
பஞ்சுபொதி, சொர்ணம்,
இரத்தினம் இவைகளைத்திருடிய
பாவங்களைப் போக்கும். நீச்ச
ஸ்திரீ, குரஸ்திரீ ஆகியோருடன்
கலந்த தோஷம் நீங்கும். லட்சுமி
கடாட்சம் உண்டாகும்.
9.ஒன்பது முகமணி: கால பைரவ
ஸ்வரூபம். புத்தி முக்திகளைக்
கொடுக்கும். பிரம்மஹத்தி
முதலான பாவங்களை நீக்கி,
சிவகதி கிடைக்கச் செய்யும்.
சகல காரிய சித்தி உண்டாகும்.
10.பத்து முகமணி: ஜெனார்த்தன
ஸ்வரூபம் என்றும், எமதர்ம
ஸ்வரூபம் என்றும் கூறுவர்.
பூத பிரேத, பீசாசுக்களையும்
மரண பயத்தையும் நீக்கும்.
தசாபுத்தி தோஷங்கள் நீங்கும்.
11.பதினொரு முகமணி:
ஏகாதசருத்திர ஸ்வரூபம், பல
அசுவமேதயாகம், ராஜசுய
யாகங்கள், கோடி கன்னிகாதான
பலனையும் தரும். எப்போதும்
சௌபாக்கியம் பெருகும்.
12.பன்னிரண்டு முகமணி:
துவாதசாதித்யர் மகாவிஷ்ணு
ஸ்வரூபம், இதை வலது காதில்
அணிந்து கொண்டால் கோமேத,
அஸ்வ மேதயாக
பலனைத்தரவல்லது. கழுத்தில்
அணிந்து கொண்டால் பல
புண்ணிய நதிகளில் இத்துடன்
நீராடுவதால் அந்த நதிகள்
இதனால் புனிதமாகும்.
சுவர்ணதான பலனையும்
கொடுக்கும்.
13.பதிமூன்று முகமணி: சகலதேவ
சொரூபம், சண்முக ஸ்வரூபம்.
இதை அணிந்தால் ரசசித்தி
இராசாயண சித்தி முதலியன
சித்திக்கும். பித்ரு ஹத்தி,
மாத்ரு ஹத்தி முதலிய
பாவங்கள் விலகும். சர்வா
பீஷ்டம், சர்வ சித்தி
கொடுக்கும்.
14.பதிநான்கு முகமணி:
ருத்ரநேத்ர, சதாசிவ ஸ்வரூபம்.
இதைச்சிகையில் (குடுமியில்)
அணிந்து கொண்டவரின் உடலில்
சிவபெருமான் நீங்காமல்
இருப்பார். தேவர் ரிஷிகள்
முதலானோரை வசப்படுத்தி
சிவபதத்தையும் அளிக்கும்.
15.பதினைந்து முகமணி:
நாதவிந்து ஸ்வரூபம்.
பலகலைகளிலும்
தேர்ச்சியுறுவர். சகல
பாவங்களையும் நீக்கும்.
16.பதினாறு முகமணி:
சிவசாயுச்சிய பதவியை
அளிக்கும். 14,15,16 முகமணிகள்
கிடைப்பது அரிதாகும்.
அறுமுகமணி வலப்புயத்திலும்,
ஒன்பது முகமணி
இடப்புயத்திலும், பதினொரு
முகமணி சிகையிலும்,
பன்னிரெண்டு முகமணி
காதுகளிலும், பதினான்கு
முகமணி சிரசிலும் தரிப்பது
உத்தமம்.
ருத்திராட்சம் எத்தனை முகம்
கொண்டதாக இருப்பினும், அதன்
புனிதம் ஒருதன்மையானது.
எளிதில் கிடைக்கும்
ருத்திராட்சமணியை வாங்கி,
பால், தேன், பஞ்சகவ்யாம்,
புண்ணிய தீர்த்தத்தாலும்,
மேலான சிவலிங்க அபிஷேக
தீர்த்தத்தால் சுத்தம் செய்து,
திரியம்பகம் மந்திரம்,
திருஐந்தெழுத்தை ஓதி அணிய
வேண்டும்.

ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?


ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.

ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

 பத்ம புராணம் கூறவது:

"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்".. பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.
ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.
==========================================================================

லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம்


மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இதனை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும். அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்ஷம் அணியவில்லை என்றால் அவர்கள் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் இந்த ருத்ராட்ஷ சேவையை என் உயிரினும் மேலாக கருதி இலவசமாக செய்கிறேன் அதனால் தயுவு செய்து ருத்ராட்ஷம் வாங்கி ஒரு விநாடி நேரம் கூட கழற்றாமல் எப்பொழுதும் அனிந்திருப்பவர்கள் மட்டுமே உங்கள் முகவரியை SMS செய்யவும் ருத்ராட்ஷத்தை வாங்கி வீட்டு பூஜை அறையிலோ, சுவாமி படத்திலோஅணிந்துவிட்டால் மஹா பாவம் ருத்ராட்ஷத்தை அணிந்துவிட்டு கழற்றிவிட்டால் மிக மஹா பாவம். உங்களால் அணிய முடியவில்லை என்றால் எங்கள் முகவரிக்கு திருப்பி அனுப்பி விடவும் மற்றவர்களுக்காவது உதவும் ஒம் நமசிவாய
"திருச்சிற்றம்பலம்"
முக்கியகுறிப்பு :
மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், நோயுற்றவர்கள், பிரார்த்தனை வைப்பவர்கள், கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் அவர்களை சிவன் தன்கண்போல் காப்பார்.

அகத்தியர்அறிவுரை



"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா.

பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. 
அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது.

சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.

ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள்.

இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்."

நீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா?


கனவுகளும் அதன் பலன்களும்
நாம் காணும் ஒவ்வொரு
கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என்
பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.
ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன்
என்று தெரியவில்லை. சமீபத்தில் நான்
படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும்,
அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு
கிடைத்தது. அதில் நான் படித்ததை
உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை
பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட
கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 –
10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம்
மாதத்திலும், இரவு 10.48 – 1.12
மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்,
இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு
10 தினங்களிலும், விடியக்காலை 3.36
-6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும்
பலிதாகும் என்று ‘பஞ்சாங்க
சாஸ்திரம்’சொல்கிறதாம். பகலில்
காணும் கனவுக்கு பயனில்லையாம்.
நற்பலன் தரும் கனவுகள்
v ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை
கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம்
உண்டு.
v வானவில்லை கனவில் கண்டால் பணம்,
செல்வாக்கு அதிகரிக்கும். பதவி
உயர்வு கிடைக்கும்.
v கனவில் நிலவை கண்டால்
தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
v விவசாயிகள் உழுவதைப்போல் கனவு
கண்டால், சேமிப்பு மேலும்
பெருகும்.
v திருமணமாகாதோர் பாம்பு கடித்து
ரத்தம் வருவது போல் கனவு கண்டால்,
சீக்கிரம் திருமணம் நிகழும்.
திருமணமானோருக்கு செல்வம் வந்து
சேரும்.
v ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல்
கனவு கண்டால் நாம் நினைத்தது
எல்லாம் நிறைவேறும்.
v இறந்தவர்களின் சடலத்தைக் கனவில்
கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
v சிறு குழந்தைகளை கனவில் கண்டால்
நோயிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
v நண்பன் இறந்ததாக கனவு கண்டால்
நண்பனின் ஆயுள் கூடும்.
v தெய்வங்களை கனவில் கண்டால்
புதையல் கிடைக்கும்.
v இறந்தவருடன் பேசுவதைப் போன்று
கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம்
நிச்சயம் கூடி வரும்.
v திருமண கோலத்தை கனவில் கண்டால்,
சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
v தற்கொலை செய்து கொள்வதை போல்
கனவு கண்டால் நொருங்கி வந்த
ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
v உயரத்தில் இருந்து விழுவது போல்
கனவு கண்டால் பணம், பாராட்டு
குவியும்.
v கர்ப்பிணியை கனவில் கண்டால்
பொருள் வந்து சேரும், நலம்
அதிகரிக்கும்.
v ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ்
உயிரினங்களை கனவில் கண்டால்
கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே
நிம்மதி பிறக்கும்.
v மயில், வானம் பாடியை கனவில்
கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம்
அதிகரிக்கும்.
v கழுதை, குதிரையை கனவில்
கண்டால் வழக்குகள் சாதகமாக
முடியும்.
v மாமிசம் உண்பது போல் கனவு
கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
v வாத்து, குயிலை கனவில் கண்டால்
நம் முயற்சிகள் எளிதில் வெற்றி
பெரும்.
v மலத்தை மிதிப்பதை போல் கனவில்
கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.
தீய பலன் தரும் கனவுகள்
v பூனையை கனவில் கண்டால்
வியாபாரத்தில் திடீர் என நஷ்டம்
ஏற்படும்.
v தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில்
கண்டால் வீண் செலவுகள் ஏற்படும்,
குடும்பம் பிரியும்.
v எறும்புகளை கனவில் கண்டால் மன
கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
v எலிகளை கனவில் கண்டால் எதிரிகள்
பலம் பெருகும்.
v இடியுடன் மழை பெய்வதைப் போல்
கனவில் கண்டால், உறவினர்கள்
விரோதியாவார்கள்.
v பசு நம்மை விரட்டுவதை போல்
கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு
வியாதி சூழும்.
v புயல் காற்று, சூறாவளி
ஆகியவற்றை கனவில் கண்டால் நோய்
உண்டாகும்.
v குதிரையில் இருந்து விழுவதை
போல் கனவு கண்டால் கொடிய
வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
v நோய் பீடித்ததாக கனவு கண்டால்,
நண்பர் ஏமாற்றுவார்.
v ஊனமாவதை போன்று கனவு கண்டால்
சோகமான செய்தி வந்து சேரும்.
v நிர்வாண கோலத்தை கனவில் கண்டால்,
அவமானம் தேடி வரும்.
v முட்டை சாப்பிடுவது கனவு
கண்டால் வறுமை பிடிக்கும்.
v முத்தமிடுவது போல் கனவு கண்டால்
செல்வாக்கு சரியும்.
v சமையல் செய்வது போல் கனவு
கண்டால் அவமானம் வந்து சேரும்.
v பழம் சாப்பிடுவது போல் கனவு
கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
v காக்கை கத்துவது போல் கனவு
கண்டால் திருட்டு நடக்க
வாய்ப்புள்ளது.
அந்த வகையில், கனவுகள்
தோன்றுவதற்கும், அதற்கு உள்ள
தொடர்பு குறித்தும் இங்கே
காணலாம்..
கனவில் ஆலயம் தோன்றுதல் மிகவும்
நல்லது. அவ்வாறு கனவு காண்பவர்
செய்யும் தொழில் வளர்ந்தோங்கும்:
தருமப் பணியால் புகழ் உண்டாகும்.
தெய்வத் திருவுருவம் இல்லாத ஆலயம்,
அல்லது பாழடைந்த ஆலயம் கனவில்
தோன்றினால் தொழில் நலிவடையும்.
புகழ் கெடும்.
ஆலயத்துக்குள் சென்று இறைவனை
வழிபடுவது போன்று கனவு
தோன்றினால் எடுத்த காரியம் இனிதே
நிறைவேறும்.
கனவில் அரண்மனையைக் கண்டால் அது
நல்ல பலனைத் தரும் என்று
கூறப்படுகிறது. அவ்வாறு கனவு
காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்.
பூர்வீக சொத்து வந்து சேரும்.
பரிசுகளை வெல்வார்கள். போட்டிப்
பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம்
கிடைக்கும்.
அடுக்கடுக்காய் வழை இலைகளை
கனவில் கண்டால் அடுத்து வரும்
நாட்களில் உங்களுக்கு நன்மைகள்
நடைபெறும். தான் வாய்விட்டு
அழுது கொண்டிருப்பது போல் கனவு
தோன்றினால் எதிர்கால வாழ்க்கையில்
இடையூறுகள் உண்டாகும்.
தன்னை அலங்கரித்துக் கொள்வது
போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு
கண்டவர் செய்யும் தொழிலில் நட்டம்
ஏற்படும். தன்னைப் பிறர் அலங்கரிப்பது
போலக் கனவு கண்டால் நண்பரால்
நம்பிக்கை மோசடிக்கு ஆளாக
நேரிடும்.
பிறரை அவமரியதை செய்வது போலக்
கனவு கண்டால் கைகூடாமல் இருந்த
காரியங்கள் இனி கைகூடிவரும்.
தன்னைப் பிறர் அவமரியாதை செய்வது
போலக் கனவு கண்டால், சிறி சிறு
தொல்லைகளும், துன்பங்களும்
வரக்கூடும். தான் பெரியோர்களை
அவமரியாதை செய்வது போலக் கனவு
கண்டால், அவ்வாறு கண்டவரது
முதலுக்கு மோசம் வரும்.
பச்சைக் கிளி கனவில் வந்தால், புதிய
நட்பு கிடைக்கும் என்றும், பச்சைக்
கிளி பறப்பது போல கனவு கண்டால்,
வாழ்கையில் முன்னேற்றம் என்றும்
நம்பப்படுகிறது.

பைரவரை வழிபாடும் முறை



தாங்க முடியாத  அளவிற்கு
எதிரிகளால் துன்பம்
அடைபவர்களையும் , விபத்து ,
துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர்
பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்
இருந்து விடுபட பைரவரை தான்
சரணடைய வேண்டும் .பைரவரிடம்
பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள்
பிரார்த்தனை நிறைவேரும் வரை
ஒவ்வொரு சனி கிழமையும்
வெண்பூசணியில் பைரவருக்கு
விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல்
மாலை 8 மணிக்குள் அல்லது கோவில்
நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி
யில் பைரவருக்கு விளக்கு போட
வேண்டும்
திறந்திருக்கும் பைரவருக்கு தான்
விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக
பைரவர் சிலையை திரை இட்டு
மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி
இருந்தாலோ அந்த பைரவருக்கு
விளக்கு போட கூடாது
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு
வேண்டுமானாலும் எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் விளக்கு
போடலாம்
இதை செய்ய முடியாதவர்கள் தினமும்
சாதரணமான விளக்கு போடலாம் ,
அதுவும் முடியாதவர்கள் வாரத்தில்
ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு
7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி
கிழமையாக இருந்தால் மிகவும்
உத்தமம் . பைரவரே அனைத்து
கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து
கிரகங்களையும் தன்னுடைய
கட்டுபாட்டில் வைத்திருப்பவர் ,
மேலும் சனி பகவானுடைய குரு)
இழந்த பொருட்களை மீண்டும் பெற:
பைரவரின் சன்னதி முன்னால் (27)
மிளகை வெள்ளைத் துணியில் சிறு
மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில்
வைத்து நல்லெண்ணெய் ஊற்றி
தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த
பொருட்களும் சொத்துக்களும் திரும்பக்
கிடைக்கும்.
குழந்தைச் செல்வம் பெற:
திருமணமாகி பல வருடங்களாகியும்
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு
தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு
அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை
செய்து, ஏழை குழந்தைகளுக்கு
அன்னதானம் வழங்கி வழிபடின்
விரைவில் அத்தம்பதியருக்குக்
குழந்தைச் செல்வம் கிட்டும்.
சனி பகவானின் அருள் கிடைக்க,
தோஷம் நீங்க:
சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால்,
பைரவரை வணங்கினால், சனிபகவான்
மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத்
தரமாட்டார். எனவே, நாம்
சனிக்கிழமைகளில் பைரவரை
வணங்கினால் சனி பகவானால்
உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.
தடைபெற்ற திருமணம் நடக்கவும்,
எதிரிகள் தொல்லை நீங்கவும்:
ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால
நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.
அதனால் உடனே நன்மை உண்டாகும்.
பில்லி, சூனியம், ஏவல் அகலும்.
திருமணம் கைகூடும்.
6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம்
ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம்
கைகூடும். தடைப்பட்ட அனைத்து
காரியங்களும் நிறைவேறும். குடும்ப
ஒற்றுமை நிலைக்கும

சித்தர்களை நேரில் தொடர்புகொள்ளும் ரகசியம்...





தேவையானவை :
குறைந்தது g10 சதுர அடி கொண்ட ஒரு
தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய
தீபம் எரியும் கிண்ணம் அதாவது
கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான
பசு நெய்(பாக்கெட் நெய்
வேண்டாம்).ஒரு காசி
சொம்பு,சுத்தமான நீர்.(வீட்டில்
நிறைகுடத்திலிருந்து தினமும்
தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும்
சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு
சரியாக 8 மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க
வேண்டும்.இரவு 9 மணிக்கு
முடித்துவிட வேண்டும்.
அகத்தியர் சித்தர்களின்
தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி,
காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள்
உள்ளனர்.உங்களுக்கு யாரைப்
பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர்
உருவம் நமக்கு தெரியாதல்லவா?
எனவே அவரது பெயரை நினைத்துக்
கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு
மணி நேரம் தொடர்ந்து ஜபித்து
வரவேண்டும்.
ஒம் சிங் ரங் அங் சிங்
இது தான் சித்தர்களை நேரில்
வரவைக்கும் மந்திரம்.ஞானக்கோவை
என்ற புத்தகத்தில் இந்த மந்திரம்
கூறப்பட்டுள்ளது.
ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு 8 மணிக்குள்
10 சதுர அடி உள்ள அறையில் ஒரு
விரிப்பு அல்லது பலகையை கிழக்கு
அல்லது வடக்கு நோக்கி
அமைக்கவும்.அதிலிருந்து 8 அடி
தூரத்தில் நமது கண்களுக்கு நேராக
வருமாறு நெய்தீபம் தாமரைநூலில்
எரியவேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம்
காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப
வேண்டும்.அந்த காசிச்சொம்பின்
முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக
வைக்க வேண்டும்.
இரவு 8 மணியானதும் அந்த தீபத்தைப்
பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர்
பெயரை நினைத்துக்கொண்டு
மேலேக் கூறிய மந்திரத்தை உதடு
அசையாமல் ஒருமணிநேரம் வரை
ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும்
ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள்
ஜபித்துவர நமது சித்தர் நேரில்
வருவார்.அவரை குருவாக
ஏற்றுக்கொண்டு நிம்மதியாக
வாழவும்.
9 மணியானதும் காசிச்சொம்பில் உள்ள
நீரைப்பருகவும்.படையல் செய்த
கனிகளைச் சாப்பிடவும்.இரவில்
பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக
தவிர்க்கவும்.உணவில்
உப்பு,காரம்,புளி
குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள்
பூமியில் சித்தர்களை
தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து
வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும்
சித்தர்களை தரிசிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாரும்
முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள்
அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர்
சந்திப்பை ரகசியமாக
வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம்
அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும்
,வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில்
இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.

காகபுஜண்டரின் ஜீவசமாதி

காகபுஜண்டரின் ஜீவசமாதி
கொண்ட -
சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,
தென்பொன்பரப்பி :
>> தென்பொன்பரப்பி எனும்
சிற்றூரில் சுமார் 1300 ஆண்டுகள் பழமை
வாய்ந்த சிவாலயம் ஒன்றுள்ளது...
.இறைவன் சொர்ணபுரீஸ்வரர்
அம்பாள் சுவர்ணாம்பிகை என்ற
திருநாமத்தில் நின்ற கோலத்தில் அருளுகிறாள்.
இந்த ஆலயத்தின் மூலவரான ஷோடச லிங்கம்
எல்லா சித்தர்களுக்கும் மூத்தவரான
காகபுஜண்டரால் பிரதிஷ்டை
செய்யப்பட்டது ஆகும் . காகபுஜண்டர்
பதினாறு ஆண்டுகள் கடுந்தவம்
மேற்கொண்டதன் விளைவாக
தவத்திற்கு மெச்சிய சிவபெருமான்
ஒரு பிரதோஷ வேளையில் 16 முகங்களை
கொண்ட ஷோடச லிங்கமாக
அவருக்குக் காட்சி தந்தார்.
>> அதே போன்ற சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து
பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க
வேண்டும் என கருதினார். அதன்
காரணமாகவே காகபுஜண்டர் இங்கு
சிவலிங்கத்தை நவபாஷாணத்துக்கு
நிகரான சூரியகாந்த தன்மை
கொண்ட ஒரே கல்லினால்
செய்யப்பட்ட லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை
செய்து வழிபட்டார் ..இக்கோவிலில்
ஜீவசமாதியும் அடைந்தார். லிங்கமானது
சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும்
விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக
அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும்
மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில்
இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
>> இந்த சிவாலயம் எழுப்பப்பட்ட
காலக்கட்டத்தில் தென்
பொன்பரப்பி பகுதியை ஆட்சி
செய்த குறுநில மன்னன்
வானகோவராயன் ஆவான் . மற்ற
சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன்
ஒரு அழகிய சிவாலயத்தை கலை நுணுக்கத்தோடு
எழுப்பினான். அப்போது ஊரில் செல்வம்
கொழித்து, பொன்னும்
பொருளும் அளவற்று புழங்கியதால்
இவ்வூருக்கு பொன் பரப்பி என்ற
பெயர் ஏற்பட்டது.
>> ஒரு கட்டத்தில் வானகோவராயனுக்கு சோதனை
வந்தது. கப்பம் கட்டாததால் சேர, சோழ,
பாண்டிய மன்னர்கள் படையெடுக்கும்
நோக்கத்தில் அவனைத் தாக்க வந்தனர்.
வானகோவராயன் குறுநில மன்னராக
இருந்தபோதும் தைரியத்தில் குறைவில்லாதவன்.
தான் வணங்கும்
சொர்ணபுரீஸ்வரரை மனமுருக
வணங்கி போருக்குப் புறப்பட்டான். ஈசனின் முழு
அருளையும் பெற்ற மகிழ்ச்சியில் போர் முரசு
கொட்டிச் சென்ற மன்னனை
பார்த்த மாத்திரத்தில் மூவேந்தர்களும் தம்
அரசமுடிகளை கழற்றி வைத்துவிட்டு திரும்பினர்.
அதனாலேயே இந்த இடம் மும்முடி என்று
அழைக்கப்படுகிறது.
>> ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி
உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30
மணிக்குள் பாலநந்தியின் இரு
கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு
கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள
சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம்.இதன்
கருவறையில் ஏற்படும் தீபமானது
துடித்துக்கொண்டே இருக்கும் என்று
காகபுஜண்டர் நாடி சுவடியில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கருவறையின்
மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும்
துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது
நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு
உணர்த்துவதாக உள்ளது.
>> காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில்
சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம்
அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
மேலும் ராகு கால வேளையில் சிவலிங்கத்தின்
உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள்
தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல்
தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின்
அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில்
ஐக்கியமாவதைக் காணலாம்.
>> இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி
அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற
பெயருடன் நின்ற கோலத்தில்
அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து
நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன்
இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது.
காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின்
ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி
உள்ளது.
>> காகபுஜண்டர் சித்தர், சிவனின்
தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து
தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம்
எடுக்கும் தன்மை கொண்டவர். எனவே
சந்திர தோஷம், சனி தோஷத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு
செய்கிறார்கள். சிவனுக்கு பின்னால்
மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி
தருகிறார்.
>> இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக
இருக்கிறது. "பால நந்தி' என்பது இதன்
திருநாமம். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த
நந்திக்கு பால் அபிஷேகம்
செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால்
நீல நிறமாக மாறுகிறது. காண கண் கோடி
வேண்டும் ..வந்து பாருங்கள் .
>> சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து
கள்ளக்குறிச்சி செல்லும் வழியில்
அம்மையகரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கே
ஒரு கி.மீ. தூரத்தில் சொர்ணபுரீஸ்வரர்
கோயில் உள்ளது
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர்
திருக்கோயில்,
தென்பொன்பரப்பி-606 201,
விழுப்புரம் மாவட்டம். தொடர்புக்கு -
9894667934.

ஜீவ சமாதி என்றால் என்ன? இது சாத்தியமா?!

ஜீவ சமாதி என்றால் என்ன? இது சாத்தியமா?!
--------------------------------------------------------------------
{ உண்மையும் பின்னணியும். }
{ இந்த தேவரகசியத்தை நமக்கு அருளிய
மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள். ]
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள்
தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக்
கொள்வதேயாகும்
.ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ
அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும்
உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய்
இருக்கும். ஆனால் நம்மால் எந்த வேதனையும் இல்லாமல்,
அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து
பிரித்தெடுக்க முடியாது. மூச்சை
அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல்
நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு
அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது
மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு
கரைந்து போகச் செய்யவும் அவர்களால்
முடியும்.இதைத்தான் ஜீவ சமாதி என்கிறோம்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய்
வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும்
யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு
விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின்
ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல்
வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது
எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது.
பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள்
ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப்
போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே
ஒடுங்கிவிடுகின்றன.அந்திவேளை வரும் போது, தன்
வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது
இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில்
அடங்கிவிடுகிறது.
உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன்
ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக
விலகுகிறது.யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து
சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும்
நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே
ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ஆதிநாதத்தை கேட்டபடி
அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய
பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற
நிலையை யோகி அடைவார். மேலைத்துவாரம் வழியாக
ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர்.
இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை.
இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல்
சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு
அடையும் நிலை.
அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை
நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு
நிலையை அடையவே சித்தர்கள்
தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை
நீட்டித்துக் கொண்டார்கள். இது ஜீவ ஐக்கியம்.
இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று
சொல்லப்படுவதுண்டு. உண்மை தான் ,அப்படி வந்து
அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இதைப் பற்றி இன்னும் தெளிவாகத்
தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள்
உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு
வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள்
இதை உங்களுக்கு செம்மையாக விளக்கி
அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த
தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல்
இருக்க வைத்து நீண்ட நாள் தன் ஆயுளை
நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது
சாத்திமா? என்று கேட்டால் திருமூலர்
சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த
தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில்
இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும்
காத்துக் கொண்டனர். திருமூலர் 4500
ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள்.
அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது
உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால்
அது சாத்தியமே என்று தோன்றுகிறது.இந்
த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை
விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின்
உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும்
என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது
உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே
வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி
வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயு மட்டும்
மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ?
அதாவது இந்த தனஞ்செயனானது
இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி,
அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய
ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன்,
தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன்
கூடி இருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான்
உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும்
இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி,
பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை
உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும்
உருவாக்கிக் கொண்டே இருப்பதால் தான் இந்த
தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கி விடுகிறது.
இதைப் பயன்படுத்தி சித்தர்கள்
இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை
அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ
வைத்துவிடுவார்கள். இதனால் தான்
இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில்
இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன்
வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து
தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற
சத்தத்துடன் மண்டையை
உடைத்துக் கொண்டு வெளியேறும்.மேலும்
ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள்
தேகத்தை எரித்துவிடக்கூடும்,
என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக்
கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது
கொலைக்குச் சமம் என்கிறார்.
வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி
வேலைகள் நடந்து கொண்டிருந்த போது,
உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து
விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக
உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது,
உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த
திருக்கோலத்தைத் தான் கண்டதாக
திரு. முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார்.
யோகியர் தேகத்தை மண்கூடத்
தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி
அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும்.
அந்த இடத்தில் இது குறித்த விபரம்
தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும்
புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில்
அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.
அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும்
இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே
இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து
உள்ளே உள்நாக்குப் பகுதியை
அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக
எடுத்துவிட்டு, மெதுவாக
கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும்
மெதுவாக கை கால்களைத்
தேய்த்து இரத்த ஓட்டம் வரச்
செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்து விடும். ஆனால்
கண்களைத் திறந்து நம் மீது
கோபித்துக் கொள்ளவும் கூடும்.
------------------------------------------------------------
----------------
ஜீவ சமாதி பற்றிய தங்கள் பகிர்வு அற்புதம். நடப்பு காலங்களில் யோகிகளின்
ஜீவ சமாதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது எனும்
போது, யோகிகள் என்ன செய்வார்கள் ?
பண்டைய காலங்களில் மக்கள் எண்ணிக்கை குறைவு.
பொது இடங்களில், திறந்த வெளிகளில் விலங்குகளால்,
மனிதர்களால், இயற்கை சீற்றங்களால் ஏதேனும்
இடையூறு நேராமல் இருக்க பூமிக்கடியில் அறை
அமைத்து சமாதி கூடினார்கள்.
அத்தகைய ஜீவ சமாதி மறுக்கப்பட்ட பிறகு, யோகிகள்
அவரவர், ஆசிரமங்களில், குடில்களில், மலைக் குகைகளில், வனாந்திரங்களில்
தங்கள் உடலை விட்டு பரத்தில் கூடுகிறார்கள். நாம்
ஊனக் கண் கொண்டு பார்த்து விட்டு அறியாமையால்
அவர்களும் நம்மைப் போல மரணம் அடைந்து விட்டார்கள் என்று
எண்ணுகிறோம். தாங்கள் இன்ன நேரத்தில்
உடலை விடுவோம் என்று முன்பே கூறிய பல யோகிகளை,
ஞானிகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களைப் போல
உயர்ந்த நிலைக்குப் போகும் தைரியமும், திறனுமில்லாத நாம்,
அவநம்பிக்கை கொள்வதோடு, மகான்களைப் பற்றித்
தவறாகவும், அவதூறாகவும் எண்ணுகிறோம், கேள்விகள்
கேட்கிறோம், பேசுகிறோம். இனியொரு நண்பர் கேட்டார்,
எத்தனையோ சித்தர்கள், ஞானிகள் வந்தாலும்,
போனாலும், இருந்தாலும் துன்பப்படுபவர்கள் துன்பப்பட்டுக்
கொண்டுதானே இருக்கிறார்கள் ? என்று.
எந்த ஞானியும் உன் துன்பத்தை நான் போக்குகிறேன்
என்று சொல்லவே இல்லை. துன்பத்தை
கடப்பதற்கு என்ன வழி என்று சொன்னதோடு, அதன்படி
வாழ்ந்து காட்டி விட்டுச் சென்றார்கள் அவ்வளவுதான். நாம்தான் அவர்கள்
காட்டிய பாதையை மறந்து விட்டு, அவர்கள்
படங்களை வைத்து மணியாட்டிக் கொண்டு
இருக்கிறோம். ஒரு வேளை நம் அழைப்பபை ஏற்று அவர்கள்
சூக்குமமாக வந்தால் கூட, அவர்கள் கூறியபடி நடந்தால்தானே
அவர்களால் உதவ முடியும். ஜீவசமாதி என்பது யோகியானவர் தன் உடல்
வாழ்வை முடிந்துக் கொள்கிற தருணமாகும். அது
தற்கொலையுமல்ல, மரணமுமல்ல. தன் ஆதியோடு
தன்னை இணத்துக் கொள்ளும் செயலாகும்.
நதியானது கடலுக்குள் சென்று நுழைவது போல்,
யோகியின் ஆன்மா பரம்பொருளின் வாசலுக்குள் நுழைகிறது. எஞ்சி நிற்கும்
ஜீவபோதமும் பரபோதமாக மாறி விடுகின்றது. பிரபஞ்ச வாழ்க்கை
குறித்த உணர்ச்சிகளானது எல்லயற்ற பேருணர்ச்சியாக
விரிவடைந்து விடுகின்றது. அவ்வேளையில் பொறிகளால் புலனாகும்
எந்த உணர்ச்சியும் யோகிக்கு இல்லை.
அவையனைத்தும் ஒடுங்கி விடுகின்றன.
மாலையானதும் தன் கூடு நோக்கி விரைவாகப் பறக்கும்
பறவை போல, யோகியின் மனமானது இதயக் கூண்டுக்குள்
சென்று ஒடுங்கி விடுகின்றது.
அவ்வேளையில் உடலெங்கும் சீதளம் பரவுகிறது. பிராணனும்
ஒவ்வொரு அவயமாக நீங்கி, உச்சந்தலைக்குப் போய்
சேர்கிறது. இறுதி கட்டத்தில் யோகியின்
உடல் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் உச்சந்தலை
மட்டும் நீண்ட நேரத்திற்கு கதகதப்பாக
இருக்கும். (யோகி அல்லாதவர்களுக்கு பிராணன் வாய் வழியாகவோ, மூக்கு
வழியாகவோ வெளியேறி விடும். உச்சந்தலைக்குப்
போகாது.) அப்பொழுது ஓம் ஓம் என்ற நாதம்
ஒலித்துக் கொண்டேயிருக்கும். முடிவில் ஓம் என்ற
ப்ரணவத்தின் வடிவினனான பரமாத்மாவின் திவ்ய சொருபம், பேரின்பம், பேரறிவு,
அருட் பெருஞ் சோதி, சித் அம்பரம் என்கிற
நிலையை யோகி அடைகின்றார். சகஸ்ராரத்தில் உள்ள நுட்பமான
துவாரம் வழியாக யோகியின் ஆன்மா பரவெளியில் கலக்கிறது. இனி யோகியின் உடலும்
பிணம்தான். யோகி வீடுபேறு அடைந்து விடுகிறார்.
இது இறப்பு அல்ல இணைப்பு. மரணமில்லாத பெரு வாழ்வு
என்பது இதுதான். ஜீவசமாதி என்கிற
அறைக்குள்ளும் இதுதான் நடந்தது.
வெளியே வாழ்ந்து மறைந்த மற்ற யோகிகளின் இறுதி
கட்டத்திலும் இதுதான் நடந்தது.
நீங்களும் முயற்சித்தால் உங்களுக்கும் இதுதான்
நடக்கும்.
மனம், வாக்கு கடந்த தெய்வீக உள் அனுபவமே சமாதி. பல
ஆண்டுகள் விடா முயற்சியுடன் மேற்கொண்ட பகீரதப்
பிரயத்தனம் போன்ற தவத்தின் விளைவாகும் அது.
ஒரு யோகியானவர் முற்றிலும் தூய்மையானவராக மாறினாலொழிய முழுமையான ஸமாதி
நிலையை எட்ட முடியாது. மேலேறுவதும்,
இறங்குவதுமாகவே இருக்கும். மேலேறிய
மனதை, உணர்வை அங்கேயே நிறுத்த பல
ஆண்டுகள் பயிற்சியும், முயற்சியும் தேவை.
ஞானத்திலும், சமாதியிலும் பல படித்தரங்களைக்
கடக்க வேண்டும். ஜீவசமாதி முயற்சி என்பது ஒரு நல்ல
மாணவனுக்கு நடக்கும் இறுதித் தேர்வை
ஒத்தது. வாழ் நாள் முழுவதும் பெற்ற அனுபவங்களைக்
கொண்டு, தன் ஜீவனை, பரத்தோடு
இணைக்கும் முயற்சியாகும். அவர்களுக்குத்
தெரியும், இனி நம்மால் பூரணத்தை எட்ட முடியும்
என்பது. அந்த நிலை வந்த பிறகுதான் அதற்கான
முயற்சியை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். இடைவிடாத முயற்சியின் பலனாக,
மூன்று அவஸ்தைகளையும் கடந்த பேரானந்தப்
பெருநிலையை அனுபவித்து அனுபவித்து
அதில் நீடித்திருக்கும் கால அளவை
அதிகரித்துப் பழகிப் பழகி முடிவில் அதிலேயே
லயித்திருந்து விடுவதே ஜீவசமாதி.
இந்த முயற்சிகளுக்கிடையே ஞானத்தின் விளைவால்
ஏற்படும் வினைத் தூய்மையையே நிர்வாணம் என்பார்கள்.
இந்த நிர்வாணிகளை ஜீவன் முக்தர்கள் என்று பகர்வார்கள். இவர்கள்
வாழ்ந்திருக்கும் பொழுதே செத்தவர்கள் போல்
இருப்பார்கள். இவர்களுக்கு ஆண், பெண் என்ற பேதம்
தோன்றாது. அனைத்தும் பரம்பொருளாகவேத்
தோன்றும். மின்னும் பொன்னையும், வைர வைடூரியங்களையும்
வெறும் மண்ணைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். இதையெல்லாம்
கடந்து ப்ரம்ம நிர்வாணத்தை அடையும் இறுதி
கட்ட நிலையே ஜீவசமாதி நிலையாகும். ப்ரம்ம நிர்வாணம்
என்பதே அபரோக்ஷ அநுபூதியாகும். மனம், வாக்குக்கு
எட்டாத பேரானந்தப் பெருநிலை அது. அப்
பெருநிலையில் இருந்து இறங்கி வந்த நாம் ஜீவர்கள். மீண்டும்
தன் முயற்சியால் அதை அடைந்தவர்கள் முக்தர்கள்.
இந்நிலையை எட்டுவதற்கான முயற்சிக்கு
இடையூறு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடுகள்
செய்து கொள்வது தேவையல்லவா ?
அதுதான் பூமிக்கடியில் அறை அமைத்து,
அதில் ஒடுங்கினார்கள். பின் வரும் காலங்களில் அதற்கான
சாத்தியக் கூறுகள் இல்லாத காரணத்தினால், அவரவர் வாழும்
இடத்திலேயே அபரோக்ஷ அநுபூதியை
அடைய வழி வகைகள் செய்து கொள்கிறார்கள்.
பகவத் கீதையிலும் இதைப் பற்றிய விளக்கம்
இருக்கிறது.
''ஸர்வத்வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி ந்ருத்ய ச |
மூர்த்ன்யாதாயாத்மன; ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம் ||
ஓம் இத்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |
ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் || 8 -12,13.
பொறி வாயில்களை அடக்கி, வெளி விவகாரங்களை உள்ளே வரவொட்டாமல்
செய்து, மனதை இதயத்தில்
நிறுத்தி, பிராணனை உச்சந்தலைக்கு ஏற்றி,
யோகத்தில் நிலைத்திருந்து, ஓம் என்ற ப்ரணவ
மந்திரத்தை மட்டும் மனதால் உச்சரித்துக்
கொண்டு, பரம்பொருளையே சிந்தித்துக்
கொண்டு யார் ஒருவர் உடலை விடுகிறாரோ, அவர் பரமகதியை
அடைகிறார்.
இதுவே ஜீவசமாதி அறைக்குள்ளோ, அல்லது
வெளியிலோ யோகியர்கள் நிகழ்த்தும் இணைதல்
முறையாகும். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது
மரணம் போலவே தோன்றும். அநுபூதிமான்கள் மட்டுமே
அதை உணர முடியும்.

தைலக் கிணற்றை கண்டறியும் ரகசியம்!




சதுரகிரி, போகர்
சதுரகிரியில் மறைவாக
இருப்பதாய் கருதப் படும் தைலக்
கிணறு பற்றி ஏராளமான கதைகள்
உண்டு. இவற்றில் பல கதைகளை
புனைவின் உச்சமாகவே கருதலாம்
பிலாவடி கருப்பண்ண சாமி
கோவிலின் பின்னால் இருப்பதாக
கூறப்படும் இந்த தைலக் கிணற்றை
இதுவரை யாரும் கண்டறிந்து
கூறியதாக தெரியவில்லை.
இரசவாதம் செய்வதற்கு தேவையான
மூலிகை குழம்பின் மிகுதி இந்த
கிணற்றுக்குள் கொட்டப் பட்டு
அதற்கு காவல் தெய்வங்களை
சித்தர்கள் நியமித்ததாகவும், அந்த
காவல் தெய்வங்கள் இந்த கிணற்றை
சாமானியர்களின் பார்வையில்
இருந்து மறைத்து
வைத்திருப்பதாகவும் மட்டுமே
சமாதானம் சொல்லப் படுகிறது.
இன்றைய பதிவில் இது தொடர்பான
சில சுவாரசியமான தகவல்களைப்
பார்ப்போம்.
பல் வேறு சித்தர்களின் பாடல்களில்
இந்த தைலக் கிணறு குறித்த
தகவல்கள் காணப் பட்டாலும், போகர்
அருளிய “போகர் ஜெனன சாகரம்”
என்கிற நூலில் காணப்படும் தகவல்
கொஞ்சம் வித்தியாசமானது.
தைலக் கிணற்றின் அமைப்பு
மற்றும் சூழலை விவரிக்கிறது
பின்வரும் பாடல்...
"ஆமடா குகையொன்று
வுள்ளேபோகு
மாயிரம்பேர் சித்தரப்பா
அதிலிருப்பார்
வாமடா காலாங்கி யையர்நின்று
வல்லவொரு கற்பமெல்லா
மங்கேதின்றார்
ஓமடா வெந்தனுக்குங் கற்பமீந்தார்
உயர்ந்ததொரு தயிலமெல்லா
மங்கேயீந்தார்
நாமடா வதிலிருந்துச்
சித்திபெற்று
சென்றுபார் காதமற் கப்பலாக
வாச்சரியம் பெரியதாகப்
பாறையொன்று"
"ஆமென்ற பாறையிலே
குழிதானுண்டுமதில்
நல்லதொரு தயிலமெல்லா
மூடினேனே
மூனேன் கருப்பனையங்
காவல்வைத்து
முதலான பொருள்வேண்டு
மென்றோர்க்கெல்லாம்
தெடினே னென்றுசொல்லித்
தெளிந்துவந்தால்
திறம்பார்த்து யிருக்குமிடஞ்
செப்புமென்றேன்"
- போகர் -
பெரிய குகை, அதில் ஆயிரம்
சித்தர்களுக்கு மேல் இருப்பார்கள்.
அங்கேதான் காலங்கிநாதர் தங்கி
பல்வேறு கற்பங்களை சாப்பிட்டார்.
எனக்கும் கூட கொடுத்தார்.காலங
்கிநாதர் அரிய பல தைல வகைகளை
எனக்கு தந்தார். நானும்
அங்கிருந்து சித்தியடைந்தேன்
என்கிறார். பின்னர் கப்பல் போல
இருக்கும் பெரிய பாறை
இருக்கிறது. அந்த பாறையில்
இருக்கும் ஒரு குழியில் இந்த
அரிய தைலத்தை எல்லாம் போட்டு
மூடினேன் என்கிறார்.இந்த
குழிக்கு கருப்பனை காவல்
வைத்திருக்கிறேன் என்கிறார்.
உண்மையான தேடல் உள்ளவர்கள்
தெளிந்து இங்கே வந்தால் அந்த
கிணற்றை காட்டச் சொல்லியே
கருப்பனை காவலுக்கு வைத்தேன்
என்கிறார் போகர்.
வெறுமனே கருப்பண்ண சாமி
கோவிலின் பின் புறம் கிணற்றை
தேடுவதை விட அந்த பகுதியில்
ஆயிரம் பேர் தங்குமளவு பெரிய
குகையும், அங்கேயோ அல்லது
பக்கத்திலோ கப்பல் மாதிரியான
பாறையும் இருக்கிறதா என
தேடினால் இந்த கிணற்றை
கண்டறிய வாய்ப்பு உள்ளது.
இத்தனை சித்தர்கள் ஓரிடத்தில் கூடி
என்ன செய்திருப்பார்கள்,
ஒருவேளை அந்த இடம் ஒரு ஆய்வுக்
கூடமாகவோ அல்லது சித்தர்கள்
தங்களின் கண்ட்றிதல்களை
பரிசோதித்துப் பார்க்கும்
பரிசோதனை கூடமாகவோ
இருந்திருக்கலாம். போகரின்
வாக்குப் படி தூய உள்ளத்துடன்
கருப்பன்ண சாமியை வணங்கி இந்த
தேடலை தொடர்ந்தால் தைலக்
கிணற்றின் ரகசியம் தெரிய வரலாம